32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>Namakkal News</span>

ரீல்ஸ், போட்டோ எடுக்க இனி அனுமதி இல்லை: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் செல்போனுக்கு தடை. Breaking News

ரீல்ஸ், போட்டோ எடுக்க இனி அனுமதி இல்லை: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் செல்போனுக்கு தடை.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று முதல் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வருவதால், கோயிலின் அமைதிக்கும், பூஜை முறைகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் முதல்கட்டமாக இன்று முதல் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு […]

August 14, 2026 Editor
ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனுக்கு ஒரு லட்சம் வெற்றிலை அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். ஆன்மீகம்

ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனுக்கு ஒரு லட்சம் வெற்றிலை அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சம் வெற்றிலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஒரு லட்சம் வெற்றிலைகளைக் கொண்டு அம்மனுக்கு […]

August 14, 2026 Editor
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் 1008 கிலோ குங்கும அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். ஆன்மீகம்

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் 1008 கிலோ குங்கும அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

ஆடி மாதத்தின் 5-வது மற்றும் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் ஓங்காளியம்மனுக்கு 1008 கிலோ குங்குமத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இன்று அம்மன் 1008 கிலோ குங்குமத்தை மலைபோல் குவித்து, அதன் நடுவே எழுந்தருளியவாறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் நீண்ட […]

August 14, 2026 Editor
மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம். நாமக்கல்

மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம்.

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், விவசாயிகளின் பயிர்க்கடனை நிபந்தனையின்றி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக நாமக்கல் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி. பாஸ்கர் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதிமுக […]

August 14, 2026 Editor
திருச்செங்கோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு. திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தொடங்கிய பேரணியை, திருச்செங்கோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், தனிப்பிரிவு எஸ்.ஐ ரவிக்குமார் உள்ளிட்ட போலீசார் மற்றும் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் […]

August 14, 2026 Editor
குமாரபாளையம் எக்ஸல் பார்மசி கல்லூரி விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை. Breaking News

குமாரபாளையம் எக்ஸல் பார்மசி கல்லூரி விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் பார்மசி கல்லூரி விடுதி அறையில் 3-ம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரேச்சல், குமாரபாளையம் எக்ஸல் பார்மசி கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக வகுப்புக்கு செல்லாமல் விடுதி அறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதிய உணவுக்குப் பிறகு அறைக்குச் சென்ற ரேச்சல், மாலை வரை வெளியே […]

August 13, 2026 Editor
லாரி கடன் வசூலில் அத்துமீறலை தவிர்க்க வேண்டும்: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல். நாமக்கல்

லாரி கடன் வசூலில் அத்துமீறலை தவிர்க்க வேண்டும்: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்.

லாரி உரிமையாளர்களுக்கு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நாமக்கல்லில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் அருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாமக்கல்லில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கடன் தவணை வசூலின்போது நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், லாரி உரிமையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. […]

August 13, 2026 Editor
குமாரபாளையத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கண்டன பேரணி. குமாரபாளையம்

குமாரபாளையத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கண்டன பேரணி.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். இதில், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். மக்கள் தொகை கட்டுப்பாட்டை கடைபிடித்த தமிழ்நாடு உள்ளிட்ட தென் […]

August 13, 2026 Editor
குமாரபாளையத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி. குமாரபாளையம்

குமாரபாளையத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி.

சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, குமாரபாளையத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருந்தியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குளத்துக்காடு பகுதியில் தொடங்கிய பேரணி, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை வழியாக சென்று குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். உடல் உறுப்பு தானம் […]

August 13, 2026 Editor
நாமக்கல்–அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த எம்.பிக்கள் கோரிக்கை. நாமக்கல்

நாமக்கல்–அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த எம்.பிக்கள் கோரிக்கை.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள முக்கிய ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்தக் கோரி, எம்.பிக்கள் ராஜேஷ்குமார் மற்றும் மாதேஸ்வரன் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தனர். நாமக்கல்–அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்திற்கான இறுதி இட ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், அதனை விரைவாக முடித்து திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் மேற்கு மற்றும் மத்திய தமிழகத்திற்கு நேரடி ரயில் […]

August 13, 2026 Editor
உடனடி செய்திகள்