32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Category: <span>ராசிபுரம்</span>

ராசிபுரம் அருகே கார்–லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: பாட்டி, 2 வயது பேரன் பலி; 4 பேர் படுகாயம் Breaking News

ராசிபுரம் அருகே கார்–லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: பாட்டி, 2 வயது பேரன் பலி; 4 பேர் படுகாயம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கார்–லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி மற்றும் 2 வயது பேரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியைச் சேர்ந்த நடேசன் (60), அவரது மனைவி அமுதா (52), மகன் பிரவீன் (32), மருமகள் கோமதி (31) மற்றும் பேரன்கள் ஜிவித் (3), நிஜித் (2) ஆகிய 6 பேரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராசிபுரம் […]

August 13, 2026 Editor
ராசிபுரம் அருகே ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. ஆன்மீகம்

ராசிபுரம் அருகே ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள 33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி மற்றும் ஸ்ரீ நாககன்னி கோயிலில், 22-ம் ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு பிடிகாசு வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், பக்தர்களுக்கு பிடிகாசு வழங்குவது வழக்கம். பிடிகாசு பெற்றால் செல்வம் பெருகும், கடன் பிரச்னைகள் நீங்கி தொழில் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. விழாவையொட்டி 108 மூலிகைகளைக் கொண்டு கணபதி ஹோமம், செல்வம் செழிக்க […]

August 12, 2026 Editor
ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் நலத்திட்ட உதவிகள். ராசிபுரம்

ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் நலத்திட்ட உதவிகள்.

பழந்தின்னிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் லி.மதுபாலன் தலைமையில், 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளின் சார்பில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழு கடன், சொட்டுநீர்ப்பாசன மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே பெறப்பட்ட 99 மனுக்களில் 70 மனுக்களுக்கு தீர்வு […]

August 12, 2026 Editor
பட்டா, அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் போராட்ட எச்சரிக்கை; அமைச்சர், கலெக்டர் நேரில் பேச்சுவார்த்தை ராசிபுரம்

பட்டா, அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் போராட்ட எச்சரிக்கை; அமைச்சர், கலெக்டர் நேரில் பேச்சுவார்த்தை

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாரைக்கிணறு, ராமநாதபுரம், மத்துரூட் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பட்டா, சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்களிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை […]

August 8, 2026 Editor
சர்வதேச சிலம்பப் போட்டி, ராசிபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை. Breaking News

சர்வதேச சிலம்பப் போட்டி, ராசிபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை.

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த மாத இறுதியில் தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில், ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த ரக்ஷா சன்மதி மற்றும் சர்வேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கங்களை வென்றனர். தாயகத்திற்கு திரும்பிய மாணவர்களை பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை இயக்குநர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். […]

August 6, 2026 Editor
உலக ரத்த தான தினம்: ராசிபுரம் தனியார் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் Breaking News

உலக ரத்த தான தினம்: ராசிபுரம் தனியார் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பழங்கள், ஜூஸ், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அகல்யா தலைமையிலான மருத்துவக் குழுவினர், மாணவர்களுக்கு உடல்நல பரிசோதனை மேற்கொண்ட பின்னர் ரத்தத்தை […]

August 6, 2026 Editor
ராசிபுரம் அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் போராட்டம். Breaking News

ராசிபுரம் அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் போராட்டம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாரைகிணறு, மத்ரூட், கார்கூடல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிப்பட்டு வரும் கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், பல்வேறு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாரைகிணறு, மத்ரூட், கார்கூடல்பட்டி உள்ளிட்ட Unserved Land பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் விவசாய நிலங்களுக்கு தேவையான […]

July 29, 2026 Editor
ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு; 3 பேர் கைது Breaking News

ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு; 3 பேர் கைது

ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில், மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வி.நகர் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி கோபாலகிருஷ்ணன் (31) என்பவர் கடந்த 6-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்தார். கடந்த 10-ஆம் தேதி மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி […]

July 28, 2026 Editor
ராசிபுரம் அருகே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா. Breaking News

ராசிபுரம் அருகே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பொங்களாயி அம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இத்திருவிழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் பங்கேற்றனர். 200 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட இந்தக் கோவிலில், திருவிழாவின்போது ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் பூச்சாட்டுடன் விழா தொடங்கிய நிலையில், பொங்களாயி அம்மன் மற்றும் விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், […]

July 27, 2026 Editor
உடனடி செய்திகள்