32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்–அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த எம்.பிக்கள் கோரிக்கை.

Editor Published: August 13, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot

🔴 LIVE COVERAGE / நேரலை
Auto-refreshing every 30s
1:31 PM

நாமக்கல்–அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த எம்.பிக்கள் கோரிக்கை.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள முக்கிய ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்தக் கோரி, எம்.பிக்கள் ராஜேஷ்குமார் மற்றும் மாதேஸ்வரன் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள முக்கிய ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்தக் கோரி, எம்.பிக்கள் ராஜேஷ்குமார் மற்றும் மாதேஸ்வரன் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தனர்.

நாமக்கல்–அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்திற்கான இறுதி இட ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், அதனை விரைவாக முடித்து திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் மேற்கு மற்றும் மத்திய தமிழகத்திற்கு நேரடி ரயில் இணைப்பு கிடைப்பதுடன், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தும் மேம்படும். மேலும், தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத ஒரே மாவட்டமான பெரம்பலூருக்கும் ரயில் வசதி கிடைக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களையும் விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

About The Author

உடனடி செய்திகள்