32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Category: <span>நாமக்கல்</span>

லாரி கடன் வசூலில் அத்துமீறலை தவிர்க்க வேண்டும்: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல். நாமக்கல்

லாரி கடன் வசூலில் அத்துமீறலை தவிர்க்க வேண்டும்: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்.

லாரி உரிமையாளர்களுக்கு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நாமக்கல்லில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் அருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாமக்கல்லில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கடன் தவணை வசூலின்போது நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், லாரி உரிமையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. […]

August 13, 2026 Editor
நாமக்கல்–அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த எம்.பிக்கள் கோரிக்கை. நாமக்கல்

நாமக்கல்–அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த எம்.பிக்கள் கோரிக்கை.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள முக்கிய ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்தக் கோரி, எம்.பிக்கள் ராஜேஷ்குமார் மற்றும் மாதேஸ்வரன் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தனர். நாமக்கல்–அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்திற்கான இறுதி இட ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், அதனை விரைவாக முடித்து திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் மேற்கு மற்றும் மத்திய தமிழகத்திற்கு நேரடி ரயில் […]

August 13, 2026 Editor
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நாமக்கல்

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து நாமக்கல்லில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுபான சில்லரை விற்பனை கடை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மதுபான சில்லரை விற்பனையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், ஆன்லைன் மது விற்பனை […]

August 13, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 330 பேர் பலி. நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 330 பேர் பலி.

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 330 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தெரிவித்துள்ளார். நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசிய அவர், இதே காலகட்டத்தில் மாவட்டத்தில் 17 கொலை வழக்குகளில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கொலை உயிரிழப்புகளைவிட சுமார் 20 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்தார். வாகனம் ஓட்டுவதற்கு […]

August 12, 2026 Editor
நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் ஜெனிவா ஒப்பந்த தின போட்டிகள்; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு. நாமக்கல்

நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் ஜெனிவா ஒப்பந்த தின போட்டிகள்; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், நாமக்கல் யூத் ரெட் கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) க. பார்வதி தலைமை வகித்தார். ஜெனிவா ஒப்பந்தங்களின் மனிதநேயக் கொள்கைகள் மற்றும் போர்க்காலங்களில் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. “குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுப்போம்”, “குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக குரல் கொடுப்போம்” […]

August 12, 2026 Editor
ஆடி அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு. ஆன்மீகம்

ஆடி அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப்படுகையில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் தீமைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது இந்து சமய நம்பிக்கையாக உள்ளது.  இதையொட்டி மோகனூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து பிண்டம், எள் உள்ளிட்டவற்றை வைத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து […]

August 12, 2026 Editor
நாமக்கல்லில் அஞ்சல் துறை பணியாளர்கள் பங்கேற்ற மூவர்ணக்கொடி விழிப்புணர்வு பேரணி. நாமக்கல்

நாமக்கல்லில் அஞ்சல் துறை பணியாளர்கள் பங்கேற்ற மூவர்ணக்கொடி விழிப்புணர்வு பேரணி.

இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நாமக்கல் அஞ்சல் கோட்டம் சார்பில் இல்லந்தோறும் மூவர்ணக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பேரணியை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இரா. இந்திரா தொடங்கி வைத்தார். இதில் அஞ்சல் கோட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூவர்ணக் கொடிகளை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர். பேரணி டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, பேருந்து நிலையம், மோகனூர் சாலை வழியாக சென்று மீண்டும் […]

August 12, 2026 Editor
நாமக்கல்லில் அங்கன்வாடி மையங்களுக்கு கெட்டுப்போன, எடை குறைவான முட்டைகள்? – ஊழியர்கள் புகார் நாமக்கல்

நாமக்கல்லில் அங்கன்வாடி மையங்களுக்கு கெட்டுப்போன, எடை குறைவான முட்டைகள்? – ஊழியர்கள் புகார்

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் கெட்டுப்போன நிலையிலும், நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட குறைவாகவும் விநியோகிக்கப்படுவதாக அங்கன்வாடி ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வந்த முட்டைகளில் சில கெட்டுப்போன நிலையிலும், எடை குறைவாகவும் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், வாரந்தோறும் கெட்டுப்போன முட்டைகள் அதிகளவில் வருவதாக அங்கன்வாடி ஊழியர்கள் […]

August 12, 2026 Editor
நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் ‘திரங்கா யாத்திரை’ நாமக்கல்

நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் ‘திரங்கா யாத்திரை’

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ‘திரங்கா யாத்திரை’ நடைபெற்றது. பா.ஜ.க. நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி. சரவணன் தலைமையில் நடைபெற்ற தேசியக்கொடி பேரணி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில் இருந்து தொடங்கியது. தொடர்ந்து பேரணி நாமக்கல் கடைவீதி வழியாக சென்று பூங்கா சாலை நுழைவுவாயில் பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேசியக்கொடிகளை ஏந்தியபடி பங்கேற்றனர். 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு […]

August 12, 2026 Editor
நாமக்கல்லில் ரூ.23 லட்சம் மதிப்பிலான 4.27 டன் புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு நாமக்கல்

நாமக்கல்லில் ரூ.23 லட்சம் மதிப்பிலான 4.27 டன் புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், ரூ.23 லட்சம் மதிப்பிலான 4,127 கிலோபுகையிலைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2023 முதல் 2025-ம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில், மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், நாமக்கல் டி.எஸ்.பி. […]

August 12, 2026 Editor
உடனடி செய்திகள்