32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Category: <span>ஆன்மீகம்</span>

ராசிபுரம் அருகே ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. ஆன்மீகம்

ராசிபுரம் அருகே ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள 33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி மற்றும் ஸ்ரீ நாககன்னி கோயிலில், 22-ம் ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு பிடிகாசு வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், பக்தர்களுக்கு பிடிகாசு வழங்குவது வழக்கம். பிடிகாசு பெற்றால் செல்வம் பெருகும், கடன் பிரச்னைகள் நீங்கி தொழில் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. விழாவையொட்டி 108 மூலிகைகளைக் கொண்டு கணபதி ஹோமம், செல்வம் செழிக்க […]

August 12, 2026 Editor
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம். ஆன்மீகம்

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் கண்கள் கொண்ட அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் […]

August 12, 2026 Editor
ஆடி அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு. ஆன்மீகம்

ஆடி அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப்படுகையில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் தீமைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது இந்து சமய நம்பிக்கையாக உள்ளது.  இதையொட்டி மோகனூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து பிண்டம், எள் உள்ளிட்டவற்றை வைத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து […]

August 12, 2026 Editor
ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு; தேரை இழுத்து பக்தர்கள் தரிசனம் ஆன்மீகம்

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு; தேரை இழுத்து பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் உடனமர் தர்மசம்வர்த்தினி தாயார் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கைலாசநாதர், நந்தி பகவான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு வெள்ளிக்காப்பு மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி […]

August 10, 2026 Editor
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை அலங்காரம் ஆன்மீகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை அலங்காரம்

உலகப் புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் இன்று முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி நடைபெற்ற உச்சிக்கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் திரளாகக் கூடியதால் சிறப்பு பூஜை நேரத்தில் பக்தி பரவசமான சூழல் நிலவியது.

August 10, 2026 Editor
கொன்னையார், குகையான் – மதுரைவீரன் கோவில் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு ஆன்மீகம்

கொன்னையார், குகையான் – மதுரைவீரன் கோவில் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ குகையான், ஸ்ரீ மதுரைவீரன் சமேத வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆடிப் பச்சை விழா நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 10 மணியளவில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணியளவில் அடசல் பெரும்பூஜையும் நடைபெற்றது. பின்னர் மதியம் 1 மணியளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. […]

August 9, 2026 Editor
திருச்செங்கோடு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு; பக்தர்களுக்கு அன்னதானம் ஆன்மீகம்

திருச்செங்கோடு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு; பக்தர்களுக்கு அன்னதானம்

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு நகர டூரிஸ்ட் வேன் அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு படைக்கப்பட்ட கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. […]

August 7, 2026 Editor
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன். ஆன்மீகம்

ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன்.

ஆடி மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக குவிந்தனர். பக்தர்கள் வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை சமர்ப்பித்து அம்மனை வழிபட்டனர். இதனால், […]

August 7, 2026 Editor
ஆடி 4-வது வெள்ளி: தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த அழகுமுத்து மாரியம்மன்; திரளான பக்தர்கள் தரிசனம் ஆன்மீகம்

ஆடி 4-வது வெள்ளி: தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த அழகுமுத்து மாரியம்மன்; திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடி மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு தேரடி வீதி, ஐந்து ரோடு பகுதியில் உள்ள அழகுமுத்து மாரியம்மன் கோயிலில், அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் திரளாகக் குவிந்ததால், கோயில் வளாகம் முழுவதும் பக்தி பரவசமான […]

August 7, 2026 Editor
ஆடி வெள்ளி தரிசனம்… சந்திரகலாதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன் ஆன்மீகம்

ஆடி வெள்ளி தரிசனம்… சந்திரகலாதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் அம்மனுக்கு ஸ்ரீ சந்திரகலாதேவி நிலாபிறை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் சிறப்பு அலங்காரங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை […]

July 25, 2026 Editor
உடனடி செய்திகள்