32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Category: <span>Breaking News</span>

வைகாசி அமாவாசை, திருச்செங்கோட்டில் திருட்டுத் தேர் இழுப்பு- அமைச்சர் தொடங்கி வைத்தார். Breaking News

வைகாசி அமாவாசை, திருச்செங்கோட்டில் திருட்டுத் தேர் இழுப்பு- அமைச்சர் தொடங்கி வைத்தார்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலின் வைகாசி விசாகத் தேர் திருவிழா வரும் 22 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனை ஒட்டி முதல் நிகழ்வாக அஷ்டதிக்கு பாலகர்கள் , நான்கு ரத வீதிகளில் உள்ள காவல் தெய்வங்களுக்கு இறைவனின் ரதவீதி உலாவை எடுத்துகூறவும், ரத பவனி தடையின்றி நடை பெறவும்  பத்ரகாளியம்மன் அம்மன் கோவிலில் இருந்து அமாவாசை திதி தினத்தன்று கிருத்திகை நட்சத்திர அம்மன்தேர் பவனிவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரியமாக அமாவாசை தின நடு இரவில் அம்மன் தேர் புறப்பாடு நடக்கும். அப்போது அனைத்து வீதிவிளக்குகள், வீட்டு விளக்குகள் அணைக்கப்பட்டு இருக்கும். இதனால் இந்த தேரோட்டத்தை இருட்டுத் தேர் என பொதுமக்கள் அழைப்பார்கள். நாளைடைவில் மருவி திருட்டுத் தேர் என அழைக்கப்பட்டது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் மட்டும் இந்த தேரை வடம் பிடித்து இழுப்பது வழக்கம். கடந்த சிலவருடங்களாக அரசு உத்தரவால் இருளில் இழுக்கப்பட்ட அம்மன் தேர் மாலையில் வெளிச்சத்தில் இழுக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், அறங்காவலர்கள் குழுத் தலைவர் தங்கமுத்து,  உள்ளிட பலர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தேரைவடம் பிடித்தனர். நான்கு ரதவீதிகள் வழியாக வந்த தேர் நிலைசேர்ந்தது. முன்னதாக பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருட்டுத் தேர் என அழைக்கப்படும் பத்ரகாளியம்மன் தேரை குழந்தைகள், பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

May 17, 2026 Editor
வெயிலின் தாக்கத்தால் தென்னையில் நோய் தாக்குதல்: விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி! Breaking News

வெயிலின் தாக்கத்தால் தென்னையில் நோய் தாக்குதல்: விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி!

திருச்செங்கோடு வட்டாரத்தில் வெயிலின் தாக்கத்தால் தென்னை மரங்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்துள்ளதையடுத்து, விவசாயிகளுக்குசிறப்பு தொழில்நுட்பப் பயிற்சி முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு வட்டாரத்தில் 1387 எக்டர் பரப்பளவில் தென்னையும், 451 எக்டர் பரப்பளவில் மா சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. தற்போதுகோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தென்னையில் பூச்சிகள் அதிக அளவில் பரவி வருகின்றன. இது குறித்து ஓ.ராஜபாளையம்கிராம விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாசிக்காடு பகுதியில் தென்னை மற்றும் மா சாகுபடிக்கான தொழில்நுட்பப் பயிற்சி முகாம்நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆழியார் தென்னை ஆராய்ச்சிநிலைய ஓய்வுபெற்ற பேராசிரியர் ராஜமாணிக்கம் மற்றும் வல்லுநர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விவசாயிகளுக்குச் சிறப்புப் பயிற்சிஅளித்தனர். தென்னைக்கு நாளொன்றுக்கு ஒரு மரத்திற்கு 100 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சொட்டுநீர் பாசனம் வழியாகவே உரங்களை அளிக்கவேண்டும். சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் நெட்டை ரகங்களை விட குட்டை ரகங்களிலேயே அதிகம் காணப்படுகிறது. இவற்றைக்கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளைப் பயன்படுத்த வேண்டும்; மேலும் ரசாயன மற்றும் இயற்கை கட்டுப்பாடு முறைகளையும் பின்பற்றவேண்டும். இதனைச் சரிசெய்ய துத்தநாக சல்பேட், தாமிர சல்பேட், அயர்ன் சல்பேட், மாங்கனீசு சல்பேட், போராக்ஸ் மற்றும் அம்மோனியம்அல்லது சோடியம் மாலிப்டேட் ஆகியவற்றை தலா 10 கிராம் அளவில் எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வேர் வழியாக அளிக்க வேண்டும். குறும்பைகள் கொட்டுவதைத் தடுக்க ‘தென்னை டானிக்’ பயன்படுத்திப் பயன்பெறலாம். மா மரங்களில் அதிக பூக்கள் பிடிப்பதற்கும், பிஞ்சுகள் உதிராமல் இருப்பதற்கும் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து வல்லுநர்கோபாலகிருஷ்ணன் விளக்கினார். அறுவடைக்குப் பின் தொழுஉரத்துடன் உயிர் உரங்களையும் பயன்படுத்த வேண்டும். ஆகஸ்ட் மற்றும்செப்டம்பர் மாதங்களில் மரங்களை கவாத்து (Pruning) செய்து, வெட்டப்பட்ட கிளைகளில் போர்டாக்ஸ் கலவையைத் தடவ வேண்டும் எனஅறிவுறுத்தினார். கூட்டத்தின் நிறைவாக, கோடை வெயிலில் இருந்து பயிர்களைக் காக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் கோடைகால சாகுபடியில் லாபம் ஈட்டும்உத்திகள் குறித்து துணை இயக்குநர் புவனேஸ்வரி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இம்முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குநர் சுகன்யாஉள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

May 17, 2026 Editor
மோகனூர் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய கோரி அமைச்சரிடம் விவசாயிகள் மனு! Breaking News

மோகனூர் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய கோரி அமைச்சரிடம் விவசாயிகள் மனு!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகாவில் முப்போகம் விளையும் விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யவலியுறுத்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். விவசாய முன்னேற்றக் கழகத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையிலான சிப்காட் எதிர்ப்பு குழுவினர் அளித்த அந்த மனுவில்கூறப்பட்டுள்ளதாவது: மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட வளையப்பட்டி, நா.புதுப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில் சிப்காட் நிறுவனம் அமைப்பதற்காக கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் சுமார் 483 ஏக்கர் முப்போகம் விளையும்செழிப்பான விவசாய நிலங்களை கையகப்படுத்த தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. இத்திட்டம் நிறைவேறினால் 300-க்கும் மேற்பட்டகுடும்பங்கள் நேரடியாகவும், சுமார் 15,000 குடும்பங்கள் மறைமுகமாகவும் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது. விவசாயநிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி இதுவரை 170-க்கும் மேற்பட்ட அறவழிப் போராட்டங்களையும், 800 நாட்களுக்கும் மேலாக தொடர்காத்திருப்புப் போராட்டத்தையும் நாங்கள் நடத்தி உள்ளோம். சிப்காட் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் சுமார் 150 ஏக்கருக்கும் மேல் மலை மற்றும் மலைக்குன்றுகள், 40-க்கும் மேற்பட்டதடுப்பணைகள், 70-க்கும் மேற்பட்ட நீரோடைகள் உள்ளன.4 கிராம மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணறுகள் மற்றும்ஆழ்துளைக் கிணறுகள் இங்குதான் அமைந்துள்ளன. மேலும், கால்நடைகளுக்கான 160 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களும் உள்ளன. 4 பெரிய ஏரிகள் உள்ளன. 50,000-க்கும் மேற்பட்ட மரங்கள் இருப்பதோடு, இது மான்கள் அதிகம் வாழும் பகுதியாகவும்திகழ்கிறது.எல்லாவற்றிற்கும் மேலாக, 1000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க கோயில்கள் இங்கு அமைந்துள்ளன. தொழிற்சாலைகள்வந்தால் இவை அனைத்தும் அழியும் நிலை ஏற்படும். இப்பகுதியில் சிப்காட் அமைப்பதன் முக்கிய நோக்கமே அரசியல் வாதிகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் சுயலாபத்திற்காகத்தான்அவர்களின் பிடியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீண்டும் சிப்காட் நிறுவனத்திடமே ஒப்படைத்து, அதன் மூலம் சுமார் 50 கோடி ரூபாய்லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு சிப்காட் அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தை தமிழக முதல்வர் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்ல வேண்டும். இயற்கை வளங்கள்நிறைந்த, முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை அழித்து உருவாக்கப்படும் இந்த சிப்காட் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை திட பேருதவி புரிய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜிடம் மோகனூர் சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

May 17, 2026 Editor
உடனடி செய்திகள்