32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Category: <span>Breaking News</span>

திருச்செங்கோடு அருகே ரவுண்டானா மீது ஏறி லாரி கவிழ்ந்து விபத்து. Breaking News

திருச்செங்கோடு அருகே ரவுண்டானா மீது ஏறி லாரி கவிழ்ந்து விபத்து.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஊஞ்சப்பாளையம் அவுட்டர் பைபாஸ் ரோடு பகுதியில், நள்ளிரவில் ரவுண்டானா மீது லாரி ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி மெதுவாக வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து எள்ளு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி லாரி ஒன்று சென்றது. ராமன் என்பவருக்கு சொந்தமான இந்த லாரியை, சிவானந்தன் என்பவர் ஓட்டி வந்தார். நள்ளிரவு, திருச்செங்கோடு ஊஞ்சப்பாளையம் அவுட்டர் பைபாஸ் ரோடு அருகே லாரி வந்தபோது  உயரம் குறைவாக இருந்த ரவுண்டானா சுவர் […]

July 22, 2026 Editor
திருச்செங்கோட்டில் அதிரடி: அதிக கட்டணம் வசூலித்த பஸ்களில் அதிகாரிகள் சோதனை! Breaking News

திருச்செங்கோட்டில் அதிரடி: அதிக கட்டணம் வசூலித்த பஸ்களில் அதிகாரிகள் சோதனை!

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் பஸ்களில், கடந்த இரு வாரங்களாக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதன் அடிப்படையில், திருச்செங்கோடு ஆர்டிஓ (பொறுப்பு) மாதவன் மற்றும் மோட்டார் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் இணைந்து, திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, அந்த வழியாக வந்த 12-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களை அதிகாரிகள் […]

July 22, 2026 Editor
திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.25.45 லட்சம் மருத்துவ உபகரணங்கள்  Breaking News

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.25.45 லட்சம் மருத்துவ உபகரணங்கள் 

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.25.45 லட்சம் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கான செக்கை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜிடம் சென்னை தனியார் அமைப்பு நிர்வாகிகள் வழங்கினர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜின் முயற்சியால், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்னை அடையார் தனியார் அமைப்பு  சார்பில், சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.25.45 லட்சத்திற்கான செக்கை தனியார் அமைப்பு […]

July 22, 2026 Editor
எலச்சிபாளையம் ஆஸ்பத்திரியில் நர்சுகளை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம். Breaking News

எலச்சிபாளையம் ஆஸ்பத்திரியில் நர்சுகளை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் நர்சுகளை நியமிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகரம் பஞ்சாயத்து பின்புறம் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஆஸ்பத்திரியில், ஆதார் மூலம் நோயாளிகளின் வருகைப் பதிவு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை, ஊசி போடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பெரும்பாலும் ஒரே நர்சு கவனித்து வருவதால், சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் […]

July 11, 2026 Editor
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் கால்நடை மருத்துவ படிப்பு அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் – பல்கலை துணைவேந்தர் தகவல். Breaking News

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் கால்நடை மருத்துவ படிப்பு அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் – பல்கலை துணைவேந்தர் தகவல்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், தமிழகத்தில் பி.வி.எஸ்சி கால்நடை மருத்தது படிப்புக்கான அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் என பல்கலை துணை வேந்தர் தெரிவித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில், கல்லூரி ஆண்டு விழா மற்றும் ஹாஸ்டல் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் (பொ) நரேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ […]

June 26, 2026 Editor
‘ஊசிகூடபோடமாட்டேங்குறாங்க..!’அமைச்சரிடம்  107 வயதுபாட்டிகண்ணீர்புகார் Breaking News

‘ஊசிகூடபோடமாட்டேங்குறாங்க..!’அமைச்சரிடம்  107 வயதுபாட்டிகண்ணீர்புகார்

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது, 107 வயது மூதாட்டி கண்ணீர் மல்க அளித்த புகாரும், ஆஸ்பத்திரியில் ஒரு மாதமாக பிரசவம் நடைபெறாததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மல்லசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், சிறிய பிரச்னைகளுக்குக் கூட திருச்செங்கோடு மற்றும் சேலம் ஜிஹெச் களுக்கு  அனுப்பி வைப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சுகப்பிரசவங்களை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. […]

June 18, 2026 Editor
திருச்செங்கோட்டில் திராவிடர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்: அருந்ததியருக்கு 6 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்! Breaking News

திருச்செங்கோட்டில் திராவிடர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்: அருந்ததியருக்கு 6 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்!

திருச்செங்கோட்டில் திராவிடர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்: அருந்ததியருக்கு 6 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், அருந்ததியர் சமுதாயத்திற்கு 6 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரியும், விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் திராவிடர் தமிழர் கட்சியின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் தமிழர் கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு இன்று திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் நிறுவனத் தலைவர் […]

May 27, 2026 Editor
70 ஆண்டு கால கனவு நனவாகுமா? காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை Breaking News

70 ஆண்டு கால கனவு நனவாகுமா? காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை

சென்னை / திருச்செங்கோடு: திருச்செங்கோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அமைச்சர் அருண்ராஜ் சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். திருச்செங்கோடு தொகுதியில் வறண்டு கிடக்கும் ஏரிகளை காவிரி உபரி நீரால் நிரப்பும் வகையில், காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் 70 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வருகிறது. பல தேர்தல்களில் இந்தத் […]

May 20, 2026 Editor
குதிரை பேரத்திற்கு இடமில்லை; நீட் தேர்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: திருச்செங்கோட்டில் அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம் Breaking News

குதிரை பேரத்திற்கு இடமில்லை; நீட் தேர்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: திருச்செங்கோட்டில் அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்

“குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை; நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என திருச்செங்கோட்டில் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக திருச்செங்கோடு வந்த த.வெ.க., மாநில கொள்கை பரப்பு பொதுச் செயலாளரும், அமைச்சருமான அருண்ராஜ், கூட்டப்பள்ளி மற்றும் ஏமப்பள்ளி ஏரிகளை ஆய்வு செய்தார். கூட்டப்பள்ளி ஏரியில் குப்பைகளை அகற்றுவது மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, “குடியிருப்புப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை ஏற்படும் என்பதால் […]

May 17, 2026 Editor
உடனடி செய்திகள்