32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>Namakkal News</span>

திருச்செங்கோடு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக திருநாவுக்கரசு நியமனம் திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக திருநாவுக்கரசு நியமனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்செங்கோடு நகர செயலாளராக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நகர செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட திருநாவுக்கரசு, திருச்செங்கோடு நரிப்பள்ளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முருகன் என்கிற முகிலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் குபேந்திரன், மணி, சின்னசாமி, கதிரேசன், சாந்தா, பொருளாளர் ராஜமாணிக்கம், மண்டல துணைச் செயலாளர்கள் பெருமாவளவன், தினேஷ் கார்த்தி, முருகானந்தம், ஒன்றிய செயலாளர் பார்த்திபன், மல்லசமுத்திரம் ஒன்றிய […]

August 9, 2026 Editor
“மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – வீரபாண்டியன். திருச்செங்கோடு

“மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – வீரபாண்டியன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 6 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் பிரச்சார நடைபயணத்தின் ஒரு பகுதியாக, திருச்செங்கோட்டில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. திருச்செங்கோடு நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், நடைபயணத்தை தொடங்கி வைத்தார். 4 ரத வீதிகள் வழியாக நடைபெற்ற நடைபயணம் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். முன்னதாக […]

August 9, 2026 Editor
காவிரி–திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றுங்கள்; திருச்செங்கோடு விவசாயிகள் கோரிக்கை. திருச்செங்கோடு

காவிரி–திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றுங்கள்; திருச்செங்கோடு விவசாயிகள் கோரிக்கை.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு, மாநில தலைவர் ரவீந்திரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நல்லா கவுண்டர், மாவட்டச் செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில், விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இலவச மின் இணைப்புகளை விரைந்து […]

August 9, 2026 Editor
நாமக்கல்லில் “போதை இல்லாத மாவட்டம்” விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாமக்கல்

நாமக்கல்லில் “போதை இல்லாத மாவட்டம்” விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நாமக்கல் மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக உருவாக்கும் நோக்கில், நாமக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில்  மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில் 5 கிலோமீட்டர், 4 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் மற்றும் 1 கிலோமீட்டர் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

August 9, 2026 Editor
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நாமக்கல்லில் சமூக ஆர்வலர்  உண்ணாவிரதம் நாமக்கல்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நாமக்கல்லில் சமூக ஆர்வலர் உண்ணாவிரதம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, வேலகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் விவசாயியுமான என். பூபதி, தனது வீட்டில் இன்று தனிநபர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பள்ளபாளையம் ஏரி, பெரியமணலி மற்றும் சேர்வம்பட்டி பெரியகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஏக்கர் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பூபதி வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் […]

August 9, 2026 Editor
பட்டா, அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் போராட்ட எச்சரிக்கை; அமைச்சர், கலெக்டர் நேரில் பேச்சுவார்த்தை ராசிபுரம்

பட்டா, அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் போராட்ட எச்சரிக்கை; அமைச்சர், கலெக்டர் நேரில் பேச்சுவார்த்தை

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாரைக்கிணறு, ராமநாதபுரம், மத்துரூட் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பட்டா, சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்களிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை […]

August 8, 2026 Editor
தரமான இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி திருச்செங்கோடு

தரமான இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் 12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறை மாணவிகள் 5 மணி நேரத்தில் கைத்தறி நெசவாளரை மையமாகக் கொண்டு ஆயிரம் ஓவியங்கள் வரைந்து நோபில் உலக சாதனை படைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர். விஜய் பாலாஜி, நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாணவிகள் வரைந்த […]

August 8, 2026 Editor
திருச்செங்கோடு,வெப்படை இன்ஸ்பெக்டர்கள் மாற்றம். Breaking News

திருச்செங்கோடு,வெப்படை இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்.

திருச்செங்கோடு மற்றும் வெப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் வளர்மதி வெப்படை போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெப்படை போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கீதா, புதுசத்திரம் போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான இடமாற்ற உத்தரவு காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

August 8, 2026 Editor
நாமக்கல் காவேட்டிப்பட்டி ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்; 2 மாதங்களில் நிறைவு – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நாமக்கல்

நாமக்கல் காவேட்டிப்பட்டி ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்; 2 மாதங்களில் நிறைவு – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட காவேட்டிப்பட்டி ஏரியை ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: காவேட்டிப்பட்டி ஏரி தூர்வாரும் பணி இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும். ஏரியை தூர்வாருவதன் மூலம் நிலத்தடி நீர் மற்றும் நீர் ஆதாரம் மேம்படும். மேலும், ஏரி சுற்றுப்பகுதி சீரமைக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கும். பறவைகள் அமர்வதற்கான இடங்கள் அமைக்கப்படுவதுடன், ஏரியில் […]

August 8, 2026 Editor
நாமக்கல்லில் விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றம்; மாநகராட்சி நடவடிக்கை நாமக்கல்

நாமக்கல்லில் விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றம்; மாநகராட்சி நடவடிக்கை

நாமக்கல் மாநகராட்சியின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், “என் குப்பை, எனது பொறுப்பு” என்ற விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி தலைமை வகித்தார். மாநகராட்சி சுகாதார அலுவலர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, மாநகராட்சி திட்ட அலுவலர் ஜெய்சங்கர், துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கர், செல்வகுமார், ஜான் ராஜா, களப்பணி உதவியாளர் சபரிநாதன், தூய்மை பணி மேற்பார்வையாளர் ஜெயராமன், தூய்மை இந்தியா […]

August 8, 2026 Editor
உடனடி செய்திகள்