32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>Namakkal News</span>

திருச்செங்கோட்டில் ரேப்பிடோ பைக் ரைடர் வாகனங்கள் பறிமுதல்; ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்த ஆர்.டி.ஓ. திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் ரேப்பிடோ பைக் ரைடர் வாகனங்கள் பறிமுதல்; ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்த ஆர்.டி.ஓ.

திருச்செங்கோட்டில் ரேப்பிடோ (Rapido) செயலி மூலம் இயங்கியதாகக் கூறப்படும் இருசக்கர வாகனங்களை ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். இதையடுத்து, இரண்டு வாகனங்களுக்கு மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்செங்கோட்டில் கடந்த சில நாட்களாக ரேப்பிடோ செயலி மூலம் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இயங்கி வருவதாகவும், இதனால் ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மையப்பா அனைத்து ஆட்டோ, […]

August 7, 2026 Editor
மங்களம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்; 5 மாதங்களில் இடமாற்றம் என அதிகாரிகள் உறுதி திருச்செங்கோடு

மங்களம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்; 5 மாதங்களில் இடமாற்றம் என அதிகாரிகள் உறுதி

திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் ஒன்றியம், மங்களம் ஊராட்சியில் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டாஸ்மாக் கடையால் இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அந்தக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தைத் தொடர்ந்து மல்லசமுத்திரம் போலீசார் மற்றும் டாஸ்மாக் தாசில்தார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், […]

August 7, 2026 Editor
மாவட்ட அளவிலான யோகா போட்டி; 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு நாமக்கல்

மாவட்ட அளவிலான யோகா போட்டி; 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட யோகா சங்கம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான யோகா போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் யோகா வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நாமக்கல் – பரமத்தி ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். போட்டியில் பங்கேற்றவர்களின் உடல் நெகிழ்வுத்தன்மை, சமநிலை, […]

August 7, 2026 Editor
பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி நாமக்கல்லில் தர்ணா; காந்தியவாதி ரமேஷ் போராட்டம் நாமக்கல்

பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி நாமக்கல்லில் தர்ணா; காந்தியவாதி ரமேஷ் போராட்டம்

பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் நிலத்தை சப்–டிவிஷன் செய்து தரக்கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, காந்தியவாதி ரமேஷ் வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். குறிப்பாக, பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் நிலத்தை […]

August 7, 2026 Editor
நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நாமக்கல்

நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் ஒன்றியக் கிளை சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஆசிரியர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு: நாமக்கல் ஒன்றியத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் மாற்றுப்பணி ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தணிக்கைத் தடைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். மேலும், கூட்டு இணையமர்வு கூட்டம் நடத்த வேண்டும். பதிநகர் மற்றும் மாருதிநகர் பள்ளிகளுக்கு […]

August 7, 2026 Editor
அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்- மனுக்கள் ஆகஸ்ட் 20-க்குள் அனுப்பலாம் நாமக்கல்

அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்- மனுக்கள் ஆகஸ்ட் 20-க்குள் அனுப்பலாம்

இந்திய அஞ்சல் துறையின் நாமக்கல் அஞ்சல் கோட்டம் சார்பில், 30.06.2026 உடன் முடிவடையும் அரையாண்டிற்கான அஞ்சல் துறை ஓய்வூதியர்களின் குறைதீர் கூட்டம் மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலி வாயிலாக (வீடியோ கான்பரன்சிங்) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஓய்வூதியர்கள், தங்களது குறைகளை “Regional Level Pension Adalat” என்ற குறிப்புடன் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட அஞ்சல் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மனுக்கள் கோட்ட அலுவலகத்திற்கு […]

August 7, 2026 Editor
திருச்செங்கோட்டில் பயோ மைனிங் மூலம் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் பயோ மைனிங் மூலம் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்.

திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக தேங்கி கிடந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாணார்பாளையம் இடுகாட்டில் புதிய பயோ மைனிங் எந்திரம் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்தார். திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் நீண்ட காலமாக அணிமூர் உரக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன. அப்பகுதியில் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, […]

August 7, 2026 Editor
நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்; Breaking News

நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்;

நாமக்கல் மோகனூர் ரோட்டில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில், காந்திவாதி ரமேஷ் தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அவர்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக வளாகத்தில் திடீரென போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க […]

August 7, 2026 Editor
கருணாநிதி நினைவு நாள்: திருச்செங்கோட்டில் தி.மு.க. சார்பில் மௌன ஊர்வலம் திருச்செங்கோடு

கருணாநிதி நினைவு நாள்: திருச்செங்கோட்டில் தி.மு.க. சார்பில் மௌன ஊர்வலம்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர தி.மு.க. சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, மேற்கு நகர தி.மு.க. செயலாளர் நடேசன், கிழக்கு […]

August 7, 2026 Editor
திருச்செங்கோட்டில் தேசிய கைத்தறி தின விழா; நெசவாளர்களுக்கு ரூ.10.34 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல் திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் தேசிய கைத்தறி தின விழா; நெசவாளர்களுக்கு ரூ.10.34 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்செங்கோடு சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மாளிகையில், தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை, திருச்செங்கோடு சரகம் சார்பில் 12-வது தேசிய கைத்தறி தின விழா இன்று  நடைபெற்றது. விழாவையொட்டி, கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த இராசிபுரம் பட்டுச் சேலைகள், சின்னப்பம்பட்டி மற்றும் ஆர்.புதுப்பாளையம் பருத்திச் சேலைகள், பவானி ஜமக்காளங்கள், சென்னிமலை போர்வைகள், துண்டுகள், மேட் உள்ளிட்ட ஜவுளிப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட […]

August 7, 2026 Editor
உடனடி செய்திகள்