32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Category: <span>Breaking News</span>

திருச்செங்கோட்டில் குடிநீர் குழாய் வெடித்து நடுரோட்டில் பள்ளம்; குடிநீர் விநியோகம் பாதிப்பு Breaking News

திருச்செங்கோட்டில் குடிநீர் குழாய் வெடித்து நடுரோட்டில் பள்ளம்; குடிநீர் விநியோகம் பாதிப்பு

திருச்செங்கோட்டில் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக ஈரோடு ரோட்டில் பெரிய பள்ளம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளுக்கு பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை திருச்செங்கோடு – ஈரோடு ரோட்டில் வேளாளர் காலனி பகுதியில் அமைந்துள்ள பிரதான குடிநீர் குழாயில் அதிக அழுத்தம் […]

August 6, 2026 Editor
ஊரின் நடுவே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு; எஸ்.பி.யிடம் கிராம மக்கள் மனு Breaking News

ஊரின் நடுவே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு; எஸ்.பி.யிடம் கிராம மக்கள் மனு

நாமக்கல் மாவட்டம், பரளி அருகே நல்லையம்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் கோழிப்பண்ணை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கோயில் பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) மனு அளித்தனர். மனுவில், நல்லையம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், கிராமத்தின் நடுப்பகுதியில் மாரியம்மன் கோயில், குலதெய்வக் கோயில், ஊர்க் கிணறு மற்றும் விவசாயக் கிணறுகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

August 6, 2026 Editor
5 ஏக்கர் விவசாய நிலம் மோசடியாக அபகரிப்பு? – எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி மனு Breaking News

5 ஏக்கர் விவசாய நிலம் மோசடியாக அபகரிப்பு? – எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி மனு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பச்சுடையாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயியும், ஜவ்வரிசி ஆலை உரிமையாளருமான செங்கோட்டையன், தனது 5 ஏக்கர் விவசாய நிலம் மோசடி மூலம் அபகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, குடும்பத்துடன் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தொழில் தேவைக்காக திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவரிடம் தனது 5 ஏக்கர் விவசாய நிலத்தை அடமானமாக வைத்து ரூ.20 லட்சம் கடன் பெற்றதாகவும், அந்த நிலம் இதுவரை தங்களது அனுபவத்திலேயே இருந்து வருவதாகவும் […]

August 6, 2026 Editor
சர்வதேச சிலம்பப் போட்டி, ராசிபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை. Breaking News

சர்வதேச சிலம்பப் போட்டி, ராசிபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை.

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த மாத இறுதியில் தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில், ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த ரக்ஷா சன்மதி மற்றும் சர்வேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கங்களை வென்றனர். தாயகத்திற்கு திரும்பிய மாணவர்களை பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை இயக்குநர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். […]

August 6, 2026 Editor
திருச்செங்கோட்டில் வீட்டிற்குள் சிக்கிய தாய் – மகள்; தீயணைப்புத் துறையினர் மீட்டனர் Breaking News

திருச்செங்கோட்டில் வீட்டிற்குள் சிக்கிய தாய் – மகள்; தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

திருச்செங்கோடு அருகே சுண்டமேடு நாடார் காலனி பகுதியில், வீட்டின் கதவு எதிர்பாராத விதமாக உள்தாழ்ப்பாள் விழுந்து பூட்டிக்கொண்டதால் வீட்டிற்குள் சிக்கிய தாய் மற்றும் மகளை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். சுண்டமேடு நாடார் காலனியைச் சேர்ந்த அனுராதா என்பவரின் மகள் காவியா (28) மற்றும் அவரது மகள் கவிஸ்ரீ (11) ஆகியோர் வீட்டிற்குள் இருந்தபோது, கதவு திடீரென உள்தாழ்ப்பாள் விழுந்து பூட்டிக்கொண்டது. இதனால் இருவரும் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் […]

August 6, 2026 Editor
உலக ரத்த தான தினம்: ராசிபுரம் தனியார் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் Breaking News

உலக ரத்த தான தினம்: ராசிபுரம் தனியார் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பழங்கள், ஜூஸ், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அகல்யா தலைமையிலான மருத்துவக் குழுவினர், மாணவர்களுக்கு உடல்நல பரிசோதனை மேற்கொண்ட பின்னர் ரத்தத்தை […]

August 6, 2026 Editor
வல்வில் ஓரி விழா நிறைவு: 166 பயனாளிகளுக்கு ரூ.83.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார். Breaking News

வல்வில் ஓரி விழா நிறைவு: 166 பயனாளிகளுக்கு ரூ.83.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்ற வல்வில் ஓரி நிறைவு விழாவில், மாவட்ட கலெக்டர் மதுபாலன் மற்றும் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் வல்வில் ஓரியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, 166 பயனாளிகளுக்கு ரூ.83.98 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி, பல்வேறு அரசு […]

August 4, 2026 Editor
பு.தி.க தலைவர் ராஜ்  வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Breaking News

பு.தி.க தலைவர் ராஜ் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்ற வல்வில் ஓரி அரசு விழாவில், புதிய திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜ், வல்வில் ஓரி மன்னரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாமக்கல் மாவட்டத்தை ஆண்ட குறுநில மன்னரும், கடையேழு வள்ளல்களில் ஒருவருமான வல்வில் ஓரி க்கு ஆண்டு தோறும் அரசு விழா ஆடி 18-ஐ முன்னிட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் […]

August 4, 2026 Editor
உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; தேசிய விருது பெற்றார் அமைச்சர் அருண்ராஜ் Breaking News

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; தேசிய விருது பெற்றார் அமைச்சர் அருண்ராஜ்

புதுடெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற 16-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் (Deceased Organ Donation) சிறந்து விளங்கிய மாநிலமாக தமிழ்நாடு தேசிய விருதைப் பெற்றது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில், மருத்துவம், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விழாவில் கலந்து கொண்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் அவர்களிடம் இருந்து ‘சிறந்த மாநிலத்திற்கான […]

August 4, 2026 Editor
திருச்செங்கோட்டில் நள்ளிரவில் விபத்து; கார் – இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு Breaking News

திருச்செங்கோட்டில் நள்ளிரவில் விபத்து; கார் – இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் நள்ளிரவில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அபிஷேக் (29), தனது நண்பர் பார்த்திபன் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த பார்த்திபன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து […]

August 4, 2026 Editor
உடனடி செய்திகள்