32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Category: <span>நாமக்கல்</span>

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாளையொட்டி நாமக்கல்லில் அமைதிப் பேரணி Breaking News

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாளையொட்டி நாமக்கல்லில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, நாமக்கல்லில் இன்று தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அண்ணா சிலையில் இருந்து காலை 8 மணிக்கு தொடங்கிய அமைதிப் பேரணி, பரமத்தி ரோட்டில் உள்ள கருணாநிதி சிலை வரை நடைபெற்றது. பின்னர், கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் சி. மணிமாறன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் […]

August 7, 2026 Editor
ஊரின் நடுவே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு; எஸ்.பி.யிடம் கிராம மக்கள் மனு Breaking News

ஊரின் நடுவே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு; எஸ்.பி.யிடம் கிராம மக்கள் மனு

நாமக்கல் மாவட்டம், பரளி அருகே நல்லையம்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் கோழிப்பண்ணை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கோயில் பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) மனு அளித்தனர். மனுவில், நல்லையம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், கிராமத்தின் நடுப்பகுதியில் மாரியம்மன் கோயில், குலதெய்வக் கோயில், ஊர்க் கிணறு மற்றும் விவசாயக் கிணறுகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

August 6, 2026 Editor
5 ஏக்கர் விவசாய நிலம் மோசடியாக அபகரிப்பு? – எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி மனு Breaking News

5 ஏக்கர் விவசாய நிலம் மோசடியாக அபகரிப்பு? – எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி மனு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பச்சுடையாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயியும், ஜவ்வரிசி ஆலை உரிமையாளருமான செங்கோட்டையன், தனது 5 ஏக்கர் விவசாய நிலம் மோசடி மூலம் அபகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, குடும்பத்துடன் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தொழில் தேவைக்காக திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவரிடம் தனது 5 ஏக்கர் விவசாய நிலத்தை அடமானமாக வைத்து ரூ.20 லட்சம் கடன் பெற்றதாகவும், அந்த நிலம் இதுவரை தங்களது அனுபவத்திலேயே இருந்து வருவதாகவும் […]

August 6, 2026 Editor
வல்வில் ஓரி விழா நிறைவு: 166 பயனாளிகளுக்கு ரூ.83.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார். Breaking News

வல்வில் ஓரி விழா நிறைவு: 166 பயனாளிகளுக்கு ரூ.83.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்ற வல்வில் ஓரி நிறைவு விழாவில், மாவட்ட கலெக்டர் மதுபாலன் மற்றும் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் வல்வில் ஓரியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, 166 பயனாளிகளுக்கு ரூ.83.98 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி, பல்வேறு அரசு […]

August 4, 2026 Editor
பு.தி.க தலைவர் ராஜ்  வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Breaking News

பு.தி.க தலைவர் ராஜ் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்ற வல்வில் ஓரி அரசு விழாவில், புதிய திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜ், வல்வில் ஓரி மன்னரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாமக்கல் மாவட்டத்தை ஆண்ட குறுநில மன்னரும், கடையேழு வள்ளல்களில் ஒருவருமான வல்வில் ஓரி க்கு ஆண்டு தோறும் அரசு விழா ஆடி 18-ஐ முன்னிட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் […]

August 4, 2026 Editor
நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி Breaking News

நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், போதைப்பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மு. ராஜேஸ்வரி தலைமை வகித்து, போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஈரநிலம் அறக்கட்டளையின் நிறுவனர் ந. தமிழரசன், போதைப்பொருட்களின் தீமைகள், அவற்றால் ஏற்படும் சமூக, உடல் மற்றும் மனநல பாதிப்புகள், மேலும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை விளக்கும் ஓவியங்களை காட்சிப்படுத்தி, […]

July 28, 2026 Editor
தமிழக அரசு நேர்மையாக செயல்படுகிறது –  செல்ல. ராசாமணி பாராட்டு. Breaking News

தமிழக அரசு நேர்மையாக செயல்படுகிறது – செல்ல. ராசாமணி பாராட்டு.

தமிழ்நாட்டில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு விதித்துள்ள தடையை வரவேற்பதாகவும், இந்தத் தடையை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல. ராசாமணி தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பது, கடந்த 10 ஆண்டுகளாக மணல் லாரி உரிமையாளர்கள் முன்வைத்து வந்த […]

July 28, 2026 Editor
மக்கள் குறைதீர் கூட்டம்- 743 மனுக்கள் பெறப்பட்டது; Breaking News

மக்கள் குறைதீர் கூட்டம்- 743 மனுக்கள் பெறப்பட்டது;

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 743 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறை […]

July 27, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் நவீன ஏஎன்பிஆர் கேமராக்கள்; எஸ்.பி. யாதவ் கிரீஷ் அசோக் தகவல் Breaking News

நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் நவீன ஏஎன்பிஆர் கேமராக்கள்; எஸ்.பி. யாதவ் கிரீஷ் அசோக் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள ஏஎன்பிஆர் (ANPR – Automatic Number Plate Recognition) நவீன கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இதுதொடர்பாக, நாமக்கல்–சேலம் ரோடு சந்திப்பில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணிகளை மாவட்ட போலீஸ் எஸ்.பி. யாதவ் கிரீஷ் அசோக் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் துறை பல்வேறு […]

July 25, 2026 Editor
உயர் அதிகாரிகள் டார்ச்சர் ?. அங்கன்வாடி உதவியாளர் தற்கொலை முயற்சி; வீடியோ வெளியிட்டு பரபரப்பு Breaking News

உயர் அதிகாரிகள் டார்ச்சர் ?. அங்கன்வாடி உதவியாளர் தற்கொலை முயற்சி; வீடியோ வெளியிட்டு பரபரப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள செவ்வந்திப்பட்டி அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் உதவியாளர் வெண்ணிலா, உயர் அதிகாரிகளின் அணுகுமுறையால் மனவேதனை அடைந்ததாக கூறி அரளி விதை அரைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடி மையத்தில் மயங்கிய நிலையில் கிடந்த வெண்ணிலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலை முயற்சிக்கு முன்பு சுமார் 9 நிமிடங்கள் கொண்ட […]

July 25, 2026 Editor
உடனடி செய்திகள்