32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Category: <span>திருச்செங்கோடு</span>

திருச்செங்கோட்டில் டைமிங் பிரச்னையால் தனியார் பஸ்கள் போட்டி; நடுரோட்டில் நிறுத்தியதால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு Breaking News

திருச்செங்கோட்டில் டைமிங் பிரச்னையால் தனியார் பஸ்கள் போட்டி; நடுரோட்டில் நிறுத்தியதால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு

திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் டைமிங் பிரச்னை காரணமாக போட்டி போட்டுக் கொண்டு சென்ற இரண்டு தனியார் பஸ்கள், நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் ஈரோடு செல்லும் பிரதான ரோட்டில் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு பஸ்களையும் பறிமுதல் செய்து, டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை எச்சரித்தனர். திருச்செங்கோட்டில் இருந்து சேலம், ஈரோடு, வேலூர், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாகவே தனியார் […]

August 6, 2026 Editor
திருச்செங்கோட்டில் குடிநீர் குழாய் வெடித்து நடுரோட்டில் பள்ளம்; குடிநீர் விநியோகம் பாதிப்பு Breaking News

திருச்செங்கோட்டில் குடிநீர் குழாய் வெடித்து நடுரோட்டில் பள்ளம்; குடிநீர் விநியோகம் பாதிப்பு

திருச்செங்கோட்டில் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக ஈரோடு ரோட்டில் பெரிய பள்ளம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளுக்கு பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை திருச்செங்கோடு – ஈரோடு ரோட்டில் வேளாளர் காலனி பகுதியில் அமைந்துள்ள பிரதான குடிநீர் குழாயில் அதிக அழுத்தம் […]

August 6, 2026 Editor
திருச்செங்கோட்டில் வீட்டிற்குள் சிக்கிய தாய் – மகள்; தீயணைப்புத் துறையினர் மீட்டனர் Breaking News

திருச்செங்கோட்டில் வீட்டிற்குள் சிக்கிய தாய் – மகள்; தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

திருச்செங்கோடு அருகே சுண்டமேடு நாடார் காலனி பகுதியில், வீட்டின் கதவு எதிர்பாராத விதமாக உள்தாழ்ப்பாள் விழுந்து பூட்டிக்கொண்டதால் வீட்டிற்குள் சிக்கிய தாய் மற்றும் மகளை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். சுண்டமேடு நாடார் காலனியைச் சேர்ந்த அனுராதா என்பவரின் மகள் காவியா (28) மற்றும் அவரது மகள் கவிஸ்ரீ (11) ஆகியோர் வீட்டிற்குள் இருந்தபோது, கதவு திடீரென உள்தாழ்ப்பாள் விழுந்து பூட்டிக்கொண்டது. இதனால் இருவரும் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் […]

August 6, 2026 Editor
உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; தேசிய விருது பெற்றார் அமைச்சர் அருண்ராஜ் Breaking News

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; தேசிய விருது பெற்றார் அமைச்சர் அருண்ராஜ்

புதுடெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற 16-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் (Deceased Organ Donation) சிறந்து விளங்கிய மாநிலமாக தமிழ்நாடு தேசிய விருதைப் பெற்றது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில், மருத்துவம், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விழாவில் கலந்து கொண்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் அவர்களிடம் இருந்து ‘சிறந்த மாநிலத்திற்கான […]

August 4, 2026 Editor
திருச்செங்கோட்டில் நள்ளிரவில் விபத்து; கார் – இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு Breaking News

திருச்செங்கோட்டில் நள்ளிரவில் விபத்து; கார் – இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் நள்ளிரவில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அபிஷேக் (29), தனது நண்பர் பார்த்திபன் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த பார்த்திபன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து […]

August 4, 2026 Editor
திருச்செங்கோட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து; பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் Breaking News

திருச்செங்கோட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து; பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு 31-வது வார்டு கவுன்சிலர் முருகேசனுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தினேஷுக்கும் இடையே கடந்த மே மாதம் குடிநீர் குழாய் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பதிவு செய்யப்பட்டிருந்த வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு அமைப்புகள் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கடந்த மே மாதம் குடிநீர் குழாய் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, தினேஷ் சாதிப் பெயரை கூறி அவதூறாக பேசியதாக கவுன்சிலர் முருகேசன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் […]

July 28, 2026 Editor
மல்லசமுத்திரத்தில் ஜூலை 29  மின்தடை;  Breaking News

மல்லசமுத்திரத்தில் ஜூலை 29  மின்தடை; 

மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (29.07.2026) புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செங்கோடு மின்வாரிய (இயக்கமும் பராமரிப்பும்) செயற்பொறியாளர் கணேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-  காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டபாளையம், கரியகவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைபட்டி, செம்பாம்பாளையம், கூத்தாநத்தம், காளிபட்டி, மங்களம், கரட்டுவளவு, சின்னகாளிபட்டி, செண்பகமகாதேவி, கொளந்தானூர், கண்டர்குலமாணிக்கம், மாமுண்டி, சப்பையாபுரம், நாச்சிபட்டி மற்றும் கட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் […]

July 27, 2026 Editor
திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி; காலாவதியான கூல்டிரிங்க்ஸ் விற்பனை? நடவடிக்கை எடுக்குமா உணவு பாதுகாப்புத்துறை? Breaking News

திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி; காலாவதியான கூல்டிரிங்க்ஸ் விற்பனை? நடவடிக்கை எடுக்குமா உணவு பாதுகாப்புத்துறை?

திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள சில கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், உணவு பாதுகாப்புத்துறை உடனடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் தேவைக்காக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த […]

July 27, 2026 Editor
மாற்று இடம் கேட்டு போராடும் மக்களை சந்தித்த டில்லிபாபு… அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி. Breaking News

மாற்று இடம் கேட்டு போராடும் மக்களை சந்தித்த டில்லிபாபு… அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி.

திருச்செங்கோடு அருகே இலுப்பிலி கிராமம் குளத்துவளவு பகுதியில், மாற்று இடம் கோரி போராடி வரும் பொதுமக்களை முன்னாள் அரூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான பி. டில்லிபாபு நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். இலுப்பிலி கிராமம் குளத்துவளவு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடியிருப்பை ஒட்டியுள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி, மழைக்காலங்களில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்து, வீடுகளின் […]

July 27, 2026 Editor
திருச்செங்கோட்டில் தங்க நகை மோசடி புகார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் Breaking News

திருச்செங்கோட்டில் தங்க நகை மோசடி புகார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு நகராட்சி 7-வது வார்டு, தொண்டிக்கரடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர், தனது 11¾ பவுன் (சுமார் 94 கிராம்) தங்க நகையை ரூ.2.50 லட்சம் கடனுக்காக அடமானமாக வழங்கியதாகவும், பின்னர் பணத்தை திருப்பிச் செலுத்திய பிறகும் நகையை மீண்டும் வழங்க மறுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் தன்னை சாதிப் பெயரை கூறி அவமதித்ததுடன், தாக்கியும் மிரட்டியும் தங்க நகையை மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையம், மாவட்ட […]

July 26, 2026 Editor
உடனடி செய்திகள்