நாமக்கல்
அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை கண்காணிக்க நாமக்கல் மாவட்டத்தில் கண்காணிப்பு குழு.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில் பொருட்கள் கள்ளச்சந்தையில் பதுக்கப்படுகிறதா? அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் விலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்கள், நாமக்கல் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை வட்டாட்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குழுவினர் நாள்தோறும் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளுக்கு நேரில் […]