32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

September 2026

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை கண்காணிக்க நாமக்கல் மாவட்டத்தில் கண்காணிப்பு குழு. நாமக்கல்

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை கண்காணிக்க நாமக்கல் மாவட்டத்தில் கண்காணிப்பு குழு.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில் பொருட்கள் கள்ளச்சந்தையில் பதுக்கப்படுகிறதா? அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் விலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்கள், நாமக்கல் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை வட்டாட்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குழுவினர் நாள்தோறும் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளுக்கு நேரில் […]

September 4, 2026 Editor
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் – விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம். திருச்செங்கோடு

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் – விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்.

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்குவதுடன், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நாமக்கல் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 9-வது மாநாடு திருச்செங்கோடு சூரியம்பாளையம் செங்குந்தர் சமுதாய நலக்கூடத்தில் உள்ள தோழர் பி. செங்கோடன் நினைவரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி. துரைசாமி தலைமை வகித்தார். மூத்த […]

September 4, 2026 Editor
நாமக்கல்லில் சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன நிர்வாகம் குறித்த சர்வதேச மாநாடு நிறைவு. நாமக்கல்

நாமக்கல்லில் சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன நிர்வாகம் குறித்த சர்வதேச மாநாடு நிறைவு.

நாமக்கல்லில் கே.கே.பி. குழும நிறுவனங்கள் மற்றும் ரீடிஃபைன் குழும நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற ‘சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன நிர்வாகம் – 2026’ என்ற சர்வதேச மாநாடு சிறப்பாக நிறைவடைந்தது. நாமக்கல் ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு, நிறுவன நிர்வாகம் தொடர்பான சர்வதேச விதிமுறைகள், சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் கே.கே.பி. குழுமத் தலைவர் […]

September 4, 2026 Editor
திருமணிமுத்தாறு வாய்க்கால் தூர்வாரும் பணிக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு. நாமக்கல்

திருமணிமுத்தாறு வாய்க்கால் தூர்வாரும் பணிக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு.

சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, நாமக்கல் மாவட்டத்தின் வழியாக சுமார் 62 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து, நன்செய் இடையார் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் திருமணிமுத்தாற்றைச் சார்ந்த நீர்வழிப்பாதைகளில் ஒன்றான மதியம்பட்டி ஏரியில் இருந்து மல்லசமுத்திரம் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் பொதுப்பணித்துறை சார்பில் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தூர்வாரும் பணிகள் என்ற பெயரில் வாய்க்காலை அதிக ஆழம் மற்றும் அகலத்துடன் அமைத்து, இருபுறங்களிலும் கான்கிரீட் தடுப்புச் […]

September 4, 2026 Editor
திருச்செங்கோடு அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழப்பு. Breaking News

திருச்செங்கோடு அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழப்பு.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்தும், மொபட்டும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த சக்கராம்பாளையம் போயர் தெரு பகுதியைச் சேர்ந்த சேகர்–அமுதா தம்பதியரின் மகள்கள் சுபிதா கலைச்செல்வி (19), நிவேதா (16), தனுஸ்ரீ (13). இவர்களது உறவினரான ரமேஷ்பாபு–வசந்தா தம்பதியரின் மகள் அபிநயா (11). இதில் சுபிதா கலைச்செல்வி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் இரண்டாம் […]

September 4, 2026 Editor
திருச்செங்கோட்டில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது. திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 29 வயது கட்டிடத் தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்செங்கோடு நகரப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், சிறுமி வீட்டின் அருகே தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சரவணன் (29) என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட […]

September 2, 2026 Editor
சேலம் அருகே வந்தே பாரத் ரயில் மீது பாட்டில் வீச்சு: 2 பேர் கைது. தமிழகம்

சேலம் அருகே வந்தே பாரத் ரயில் மீது பாட்டில் வீச்சு: 2 பேர் கைது.

சேலம் அருகே ஓடும் வந்தே பாரத் ரயில் மீது பொருள் வீசப்பட்ட சம்பவத்தில் 2 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற 20671 மதுரை–பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி மல்லூர்–சேலம் இடையே சென்று கொண்டிருந்தபோது, ஏசி பெட்டியின் ஜன்னல் கண்ணாடி மீது கல் அல்லது பொருள் வீசப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. […]

September 2, 2026 Editor
போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் குறித்து அவதூறு பதிவு: காவல் நிலையத்தில் புகார். திருச்செங்கோடு

போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் குறித்து அவதூறு பதிவு: காவல் நிலையத்தில் புகார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். திருமண நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் கோயிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கோயிலுக்குள் செல்போன் மற்றும் கேமராக்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், திருமண நிகழ்வுகளை பதிவு செய்யச் செல்லும் போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான பதிவுகள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. பெயர் குறிப்பிடாமல், ஊர் பெயரை மட்டும் குறிப்பிட்டு செயல்படும் முகநூல் […]

September 2, 2026 Editor
திருச்செங்கோட்டில் தூய்மை பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசில் புகார். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் தூய்மை பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசில் புகார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 6-வது வார்டு சேலம் ரோடு முனியப்பன் கோயில் அருகே வசித்து வருபவர் ஆனந்தகுமார் (55). இவர் தனது பகுதியில் தூய்மை பணிக்கு வரும் பணியாளர்களிடம் அடிக்கடி குறை கூறி வந்ததாக தெரிகிறது. மேலும், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் புகார் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை ஆனந்தகுமார் வீட்டின் அருகே உள்ள சாக்கடையை தூய்மை செய்வதற்காக நகராட்சி தூய்மை பணியாளர் வடிவேலு சென்றுள்ளார். சாக்கடை அடைப்பு குறித்து […]

September 2, 2026 Editor
ராசிபுரம் அருகே பிட்புல் நாய் கடித்து பெண் படுகாயம்: மயக்க ஊசி செலுத்தி நாயை பிடித்த நகராட்சி ஊழியர்கள். Breaking News

ராசிபுரம் அருகே பிட்புல் நாய் கடித்து பெண் படுகாயம்: மயக்க ஊசி செலுத்தி நாயை பிடித்த நகராட்சி ஊழியர்கள்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிட்புல் நாய் கடித்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் நாயை சுற்றிவளைத்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள், மயக்க ஊசி செலுத்தி நாயை பாதுகாப்பாக பிடித்துச் சென்றனர். ராசிபுரம் அருகே தொப்பப்பட்டி பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் சுமார் ஒன்றரை வயதுடைய பிட்புல் நாயை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் வெளிநாட்டில் இருப்பதால், நாயை பராமரிப்பதற்காக ராசிபுரம் ஐந்து கடை பகுதியில் வசிக்கும் தனது நண்பர் […]

September 2, 2026 Editor