32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

September 2026

பரமத்தி அருகே கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். நாமக்கல்

பரமத்தி அருகே கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்திற்குட்பட்ட கோலாரம் கிராமம் தாகாக்களரையில் தனியார் நிறுவனம் சார்பில் ‘கேஸ் பாட்லிங் பிளாண்ட் ’ அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோலாரம், செருக்கலை, லத்துவாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு, கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். […]

September 7, 2026 Editor
ராசிபுரத்தில் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி விசிக ஆர்ப்பாட்டம். ராசிபுரம்

ராசிபுரத்தில் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி விசிக ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி பகுதியில் ஆதிதிராவிடர் தெருவில் அமைந்துள்ளதாக கூறப்படும் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக மாவட்ட செயலாளர் சுடரழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின்போது, சம்பந்தப்பட்ட […]

September 7, 2026 Editor
திருச்செங்கோடு அருகே 4 மாணவிகள் உயிரிழந்த விபத்து: தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கைது. திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே 4 மாணவிகள் உயிரிழந்த விபத்து: தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கைது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சக்கராம்பாளையம் பிரிவு பகுதியில் 4 மாணவிகள் உயிரிழந்த சாலை விபத்து தொடர்பாக, தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரை எலச்சிபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எலச்சிபாளையம் அடுத்த சக்கராம்பாளையம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 மாணவிகள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில் 4 மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, விபத்து குறித்து எலச்சிபாளையம் […]

September 4, 2026 Editor
எலச்சிபாளையம் விபத்து நடந்த பகுதியில் சாலை தடுப்புகள் அமைப்பு. திருச்செங்கோடு

எலச்சிபாளையம் விபத்து நடந்த பகுதியில் சாலை தடுப்புகள் அமைப்பு.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த சக்கராம்பாளையம் பிரிவு பகுதியில் நேற்று மாலை தனியார் கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற பகுதி சாலை வளைவாக இருப்பதால், சக்கராம்பாளையம் பிரிவு சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வரும் வாகனங்கள், அந்த வழியாக வேகமாக வரும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு சரியாக தெரிவதில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதாகவும், விபத்துகளை […]

September 4, 2026 Editor
செப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் – அரசு ஊழியர் சங்கம். நாமக்கல்

செப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் – அரசு ஊழியர் சங்கம்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எந்தவித சாதகமான அறிவிப்பும் வெளியாகவில்லை என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பிரதிநிதிகள் பேரவை கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று, அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அம்சராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது […]

September 4, 2026 Editor
திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் 4 மாணவிகள் உயிரிழப்பு: தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் விஜய் அறிவிப்பு. தமிழகம்

திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் 4 மாணவிகள் உயிரிழப்பு: தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் விஜய் அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் நேற்று (செப்.3) நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர், குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கொன்னையார் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுபிதா (19), தனது சகோதரிகளான நிவேதா (17), தனுஸ்ரீ (13) மற்றும் உறவினரான அபிநயா (12) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றபோது, தனியார் கல்லூரி பேருந்து […]

September 4, 2026 Editor
திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் 4 மாணவிகள் உயிரிழப்பு: அமைச்சர் அருண்ராஜ் இரங்கல். திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் 4 மாணவிகள் உயிரிழப்பு: அமைச்சர் அருண்ராஜ் இரங்கல்.

எலச்சிபாளையம் அருகே சக்கராம்பாளையம் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் கல்லூரி மாணவி சுபிதா கலைச்செல்வி, பள்ளி மாணவிகள் நிவேதா, தனுஸ்ரீ, அபிநயா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக குடும்பநலத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்செங்கோடு அருகே […]

September 4, 2026 Editor
திருச்செங்கோடு காவல் உட்கோட்ட ஏ.எஸ்.பி.யாக அஸ்வினி பொறுப்பேற்பு. திருச்செங்கோடு

திருச்செங்கோடு காவல் உட்கோட்ட ஏ.எஸ்.பி.யாக அஸ்வினி பொறுப்பேற்பு.

திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தின் புதிய ஏ.எஸ்.பி ஆக அஸ்வினி பொறுப்பேற்றுக் கொண்டார். பி.இ. பட்டதாரியான அஸ்வினி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரியானார். தொடர்ந்து திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பயிற்சி பெற்றார். பயிற்சியை நிறைவு செய்த அவர், முதன்முறையாக ஏ.எஸ்.பி ஆக திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தில் பொறுப்பேற்றுள்ளார். திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தில் இதுவரை குரூப் 1 கேடரில் உள்ள டிஎஸ்பிக்கள் மட்டுமே பதவி வகித்து வந்த நிலையில் முதல் முறையாக ஐபிஎஸ் […]

September 4, 2026 Editor
விநாயகர் சதுர்த்தி: சுற்றுச்சூழலை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். நாமக்கல்

விநாயகர் சதுர்த்தி: சுற்றுச்சூழலை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்டகால பாரம்பரியம் உள்ளதாகவும், விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். செய்ய வேண்டியவை சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு […]

September 4, 2026 Editor
அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்: தனியார் பேருந்துகளுக்கும் மானியம் வழங்கினால் இலவச சேவை – உரிமையாளர்கள். ராசிபுரம்

அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்: தனியார் பேருந்துகளுக்கும் மானியம் வழங்கினால் இலவச சேவை – உரிமையாளர்கள்.

அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் வழங்கப்படுவது போல், தனியார் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கும் அரசு மானியம் வழங்கினால், அவர்களையும் இலவசமாக பயணிக்க அனுமதிக்க தயாராக இருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தனியார் பேருந்து சங்க முன்னாள் பொருளாளரும், பேருந்து உரிமையாளருமான சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு […]

September 4, 2026 Editor