நாமக்கல்
பரமத்தி அருகே கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்திற்குட்பட்ட கோலாரம் கிராமம் தாகாக்களரையில் தனியார் நிறுவனம் சார்பில் ‘கேஸ் பாட்லிங் பிளாண்ட் ’ அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோலாரம், செருக்கலை, லத்துவாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு, கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். […]