32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Author: <span>Editor</span>

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு; தேரை இழுத்து பக்தர்கள் தரிசனம் ஆன்மீகம்

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு; தேரை இழுத்து பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் உடனமர் தர்மசம்வர்த்தினி தாயார் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கைலாசநாதர், நந்தி பகவான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு வெள்ளிக்காப்பு மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி […]

August 10, 2026 Editor
திருச்செங்கோட்டில் தொழிற்சங்கங்கள் மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் தொழிற்சங்கங்கள் மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐகேஎஸ், ஐஎன்டியுசி, எஸ்.கே.எம்., யுடியுசி, எம்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் […]

August 10, 2026 Editor
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை அலங்காரம் ஆன்மீகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை அலங்காரம்

உலகப் புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் இன்று முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி நடைபெற்ற உச்சிக்கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் திரளாகக் கூடியதால் சிறப்பு பூஜை நேரத்தில் பக்தி பரவசமான சூழல் நிலவியது.

August 10, 2026 Editor
ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க கோரி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை!  பரமத்திவேலூர்

ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க கோரி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை! 

ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பரமத்தி வேலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர். ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறிய விவசாயிகள், உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அதிகாரிகளுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ராஜவாய்க்காலில் தண்ணீர் திறப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரே நேரத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை […]

August 10, 2026 Editor
கொன்னையார், குகையான் – மதுரைவீரன் கோவில் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு ஆன்மீகம்

கொன்னையார், குகையான் – மதுரைவீரன் கோவில் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ குகையான், ஸ்ரீ மதுரைவீரன் சமேத வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆடிப் பச்சை விழா நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 10 மணியளவில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணியளவில் அடசல் பெரும்பூஜையும் நடைபெற்றது. பின்னர் மதியம் 1 மணியளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. […]

August 9, 2026 Editor
திருச்செங்கோடு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக திருநாவுக்கரசு நியமனம் திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக திருநாவுக்கரசு நியமனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்செங்கோடு நகர செயலாளராக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நகர செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட திருநாவுக்கரசு, திருச்செங்கோடு நரிப்பள்ளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முருகன் என்கிற முகிலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் குபேந்திரன், மணி, சின்னசாமி, கதிரேசன், சாந்தா, பொருளாளர் ராஜமாணிக்கம், மண்டல துணைச் செயலாளர்கள் பெருமாவளவன், தினேஷ் கார்த்தி, முருகானந்தம், ஒன்றிய செயலாளர் பார்த்திபன், மல்லசமுத்திரம் ஒன்றிய […]

August 9, 2026 Editor
“மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – வீரபாண்டியன். திருச்செங்கோடு

“மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – வீரபாண்டியன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 6 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் பிரச்சார நடைபயணத்தின் ஒரு பகுதியாக, திருச்செங்கோட்டில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. திருச்செங்கோடு நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், நடைபயணத்தை தொடங்கி வைத்தார். 4 ரத வீதிகள் வழியாக நடைபெற்ற நடைபயணம் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். முன்னதாக […]

August 9, 2026 Editor
காவிரி–திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றுங்கள்; திருச்செங்கோடு விவசாயிகள் கோரிக்கை. திருச்செங்கோடு

காவிரி–திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றுங்கள்; திருச்செங்கோடு விவசாயிகள் கோரிக்கை.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு, மாநில தலைவர் ரவீந்திரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நல்லா கவுண்டர், மாவட்டச் செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில், விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இலவச மின் இணைப்புகளை விரைந்து […]

August 9, 2026 Editor
நாமக்கல்லில் “போதை இல்லாத மாவட்டம்” விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாமக்கல்

நாமக்கல்லில் “போதை இல்லாத மாவட்டம்” விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நாமக்கல் மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக உருவாக்கும் நோக்கில், நாமக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில்  மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில் 5 கிலோமீட்டர், 4 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் மற்றும் 1 கிலோமீட்டர் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

August 9, 2026 Editor
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நாமக்கல்லில் சமூக ஆர்வலர்  உண்ணாவிரதம் நாமக்கல்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நாமக்கல்லில் சமூக ஆர்வலர் உண்ணாவிரதம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, வேலகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் விவசாயியுமான என். பூபதி, தனது வீட்டில் இன்று தனிநபர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பள்ளபாளையம் ஏரி, பெரியமணலி மற்றும் சேர்வம்பட்டி பெரியகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஏக்கர் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பூபதி வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் […]

August 9, 2026 Editor
உடனடி செய்திகள்