32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Month: <span>August 2026</span>

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ரூ.349 ஆக உயர்வு!. தமிழகம்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ரூ.349 ஆக உயர்வு!.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தனது சில ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது ரூ.349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டத்தின் கட்டணம் சுமார் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. பழைய ரூ.299 திட்டத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய ரூ.349 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக […]

August 12, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 330 பேர் பலி. நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 330 பேர் பலி.

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 330 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தெரிவித்துள்ளார். நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசிய அவர், இதே காலகட்டத்தில் மாவட்டத்தில் 17 கொலை வழக்குகளில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கொலை உயிரிழப்புகளைவிட சுமார் 20 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்தார். வாகனம் ஓட்டுவதற்கு […]

August 12, 2026 Editor
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம். ஆன்மீகம்

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் கண்கள் கொண்ட அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் […]

August 12, 2026 Editor
ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் நலத்திட்ட உதவிகள். ராசிபுரம்

ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் நலத்திட்ட உதவிகள்.

பழந்தின்னிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் லி.மதுபாலன் தலைமையில், 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளின் சார்பில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழு கடன், சொட்டுநீர்ப்பாசன மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே பெறப்பட்ட 99 மனுக்களில் 70 மனுக்களுக்கு தீர்வு […]

August 12, 2026 Editor
நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் ஜெனிவா ஒப்பந்த தின போட்டிகள்; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு. நாமக்கல்

நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் ஜெனிவா ஒப்பந்த தின போட்டிகள்; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், நாமக்கல் யூத் ரெட் கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) க. பார்வதி தலைமை வகித்தார். ஜெனிவா ஒப்பந்தங்களின் மனிதநேயக் கொள்கைகள் மற்றும் போர்க்காலங்களில் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. “குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுப்போம்”, “குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக குரல் கொடுப்போம்” […]

August 12, 2026 Editor
ஆக.14-ல் உஞ்சனை, முசிறி, இளநகரில் மின்தடை. திருச்செங்கோடு

ஆக.14-ல் உஞ்சனை, முசிறி, இளநகரில் மின்தடை.

திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட உஞ்சனை, முசிறி, இளநகர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 14.08.2026 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உஞ்சனை துணை மின்நிலையம்: உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடையகவுண்டம்பாளையம், ஆலாங்காட்டுப்புதூர், சத்தியநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், 85-கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி, போக்கம்பாளையம், சமுத்திரபாளையம், மோளிப்பள்ளி, மாச்சம்பாளையம், இடையார்பாளையம், T.கைலாசம்பாளையம், கரிச்சிபாளையம் மற்றும் கோலாரம். முசிறி துணை மின்நிலையம்: […]

August 12, 2026 Editor
ஆடி அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு. ஆன்மீகம்

ஆடி அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப்படுகையில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் தீமைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது இந்து சமய நம்பிக்கையாக உள்ளது.  இதையொட்டி மோகனூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து பிண்டம், எள் உள்ளிட்டவற்றை வைத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து […]

August 12, 2026 Editor
நாமக்கல்லில் அஞ்சல் துறை பணியாளர்கள் பங்கேற்ற மூவர்ணக்கொடி விழிப்புணர்வு பேரணி. நாமக்கல்

நாமக்கல்லில் அஞ்சல் துறை பணியாளர்கள் பங்கேற்ற மூவர்ணக்கொடி விழிப்புணர்வு பேரணி.

இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நாமக்கல் அஞ்சல் கோட்டம் சார்பில் இல்லந்தோறும் மூவர்ணக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பேரணியை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இரா. இந்திரா தொடங்கி வைத்தார். இதில் அஞ்சல் கோட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூவர்ணக் கொடிகளை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர். பேரணி டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, பேருந்து நிலையம், மோகனூர் சாலை வழியாக சென்று மீண்டும் […]

August 12, 2026 Editor
திருச்செங்கோடு அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு!. திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு!.

திருச்செங்கோடு காவல் எல்லைக்குட்பட்ட ராஜகவுண்டம்பாளையம் முனியப்பன் கோவில் பின்புறம் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள ஊர் பொதுக்கிணற்றில், வெங்கடாசலம் (சுமார் 40) என்பவர் தவறி விழுந்து உயிருக்கு போராடினார். கிணற்றில் சுமார் 30 அடி அளவுக்கு தண்ணீர் இருந்த நிலையில், கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் வெங்கடாசலம் தவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகரணங்களின் உதவியுடன் கிணற்றுக்குள் […]

August 12, 2026 Editor
உடனடி செய்திகள்