32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>நாமக்கல் செய்திகள்</span>

நாமக்கல்லில் “போதை இல்லாத மாவட்டம்” விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாமக்கல்

நாமக்கல்லில் “போதை இல்லாத மாவட்டம்” விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நாமக்கல் மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக உருவாக்கும் நோக்கில், நாமக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில்  மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில் 5 கிலோமீட்டர், 4 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் மற்றும் 1 கிலோமீட்டர் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

August 9, 2026 Editor
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நாமக்கல்லில் சமூக ஆர்வலர்  உண்ணாவிரதம் நாமக்கல்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நாமக்கல்லில் சமூக ஆர்வலர் உண்ணாவிரதம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, வேலகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் விவசாயியுமான என். பூபதி, தனது வீட்டில் இன்று தனிநபர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பள்ளபாளையம் ஏரி, பெரியமணலி மற்றும் சேர்வம்பட்டி பெரியகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஏக்கர் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பூபதி வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் […]

August 9, 2026 Editor
பட்டா, அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் போராட்ட எச்சரிக்கை; அமைச்சர், கலெக்டர் நேரில் பேச்சுவார்த்தை ராசிபுரம்

பட்டா, அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் போராட்ட எச்சரிக்கை; அமைச்சர், கலெக்டர் நேரில் பேச்சுவார்த்தை

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாரைக்கிணறு, ராமநாதபுரம், மத்துரூட் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பட்டா, சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்களிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை […]

August 8, 2026 Editor
தரமான இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி திருச்செங்கோடு

தரமான இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் 12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறை மாணவிகள் 5 மணி நேரத்தில் கைத்தறி நெசவாளரை மையமாகக் கொண்டு ஆயிரம் ஓவியங்கள் வரைந்து நோபில் உலக சாதனை படைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர். விஜய் பாலாஜி, நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாணவிகள் வரைந்த […]

August 8, 2026 Editor
நாமக்கல் காவேட்டிப்பட்டி ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்; 2 மாதங்களில் நிறைவு – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நாமக்கல்

நாமக்கல் காவேட்டிப்பட்டி ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்; 2 மாதங்களில் நிறைவு – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட காவேட்டிப்பட்டி ஏரியை ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: காவேட்டிப்பட்டி ஏரி தூர்வாரும் பணி இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும். ஏரியை தூர்வாருவதன் மூலம் நிலத்தடி நீர் மற்றும் நீர் ஆதாரம் மேம்படும். மேலும், ஏரி சுற்றுப்பகுதி சீரமைக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கும். பறவைகள் அமர்வதற்கான இடங்கள் அமைக்கப்படுவதுடன், ஏரியில் […]

August 8, 2026 Editor
நாமக்கல்லில் விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றம்; மாநகராட்சி நடவடிக்கை நாமக்கல்

நாமக்கல்லில் விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றம்; மாநகராட்சி நடவடிக்கை

நாமக்கல் மாநகராட்சியின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், “என் குப்பை, எனது பொறுப்பு” என்ற விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி தலைமை வகித்தார். மாநகராட்சி சுகாதார அலுவலர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, மாநகராட்சி திட்ட அலுவலர் ஜெய்சங்கர், துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கர், செல்வகுமார், ஜான் ராஜா, களப்பணி உதவியாளர் சபரிநாதன், தூய்மை பணி மேற்பார்வையாளர் ஜெயராமன், தூய்மை இந்தியா […]

August 8, 2026 Editor
மாவட்ட அளவிலான யோகா போட்டி; 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு நாமக்கல்

மாவட்ட அளவிலான யோகா போட்டி; 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட யோகா சங்கம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான யோகா போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் யோகா வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நாமக்கல் – பரமத்தி ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். போட்டியில் பங்கேற்றவர்களின் உடல் நெகிழ்வுத்தன்மை, சமநிலை, […]

August 7, 2026 Editor
பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி நாமக்கல்லில் தர்ணா; காந்தியவாதி ரமேஷ் போராட்டம் நாமக்கல்

பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி நாமக்கல்லில் தர்ணா; காந்தியவாதி ரமேஷ் போராட்டம்

பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் நிலத்தை சப்–டிவிஷன் செய்து தரக்கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, காந்தியவாதி ரமேஷ் வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். குறிப்பாக, பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் நிலத்தை […]

August 7, 2026 Editor
நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நாமக்கல்

நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் ஒன்றியக் கிளை சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஆசிரியர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு: நாமக்கல் ஒன்றியத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் மாற்றுப்பணி ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தணிக்கைத் தடைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். மேலும், கூட்டு இணையமர்வு கூட்டம் நடத்த வேண்டும். பதிநகர் மற்றும் மாருதிநகர் பள்ளிகளுக்கு […]

August 7, 2026 Editor
அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்- மனுக்கள் ஆகஸ்ட் 20-க்குள் அனுப்பலாம் நாமக்கல்

அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்- மனுக்கள் ஆகஸ்ட் 20-க்குள் அனுப்பலாம்

இந்திய அஞ்சல் துறையின் நாமக்கல் அஞ்சல் கோட்டம் சார்பில், 30.06.2026 உடன் முடிவடையும் அரையாண்டிற்கான அஞ்சல் துறை ஓய்வூதியர்களின் குறைதீர் கூட்டம் மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலி வாயிலாக (வீடியோ கான்பரன்சிங்) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஓய்வூதியர்கள், தங்களது குறைகளை “Regional Level Pension Adalat” என்ற குறிப்புடன் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட அஞ்சல் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மனுக்கள் கோட்ட அலுவலகத்திற்கு […]

August 7, 2026 Editor
உடனடி செய்திகள்