32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

Editor Published: August 12, 2026 1 நிமிட வாசிப்பு ஆன்மீகம்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot


ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் கண்கள் கொண்ட அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையொட்டி ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

About The Author

உடனடி செய்திகள்