32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

மங்களம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்; 5 மாதங்களில் இடமாற்றம் என அதிகாரிகள் உறுதி

Editor Published: August 7, 2026 1 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot


திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் ஒன்றியம், மங்களம் ஊராட்சியில் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டாஸ்மாக் கடையால் இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அந்தக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தைத் தொடர்ந்து மல்லசமுத்திரம் போலீசார் மற்றும் டாஸ்மாக் தாசில்தார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில், மங்களம் டாஸ்மாக் கடை 5 மாதங்களுக்குள் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

About The Author

உடனடி செய்திகள்