32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>திருச்செங்கோடு டவுன் போலீஸ்</span>

திருச்செங்கோடு,வெப்படை இன்ஸ்பெக்டர்கள் மாற்றம். Breaking News

திருச்செங்கோடு,வெப்படை இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்.

திருச்செங்கோடு மற்றும் வெப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் வளர்மதி வெப்படை போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெப்படை போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கீதா, புதுசத்திரம் போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான இடமாற்ற உத்தரவு காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

August 8, 2026 Editor
கூட்டப்பள்ளி ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டிய இருவர் பிடிபட்டனர்; நடவடிக்கை இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு Breaking News

கூட்டப்பள்ளி ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டிய இருவர் பிடிபட்டனர்; நடவடிக்கை இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரியில் நள்ளிரவு நேரத்தில் மருத்துவக் கழிவுகள், மதுபானப் பாட்டில்கள் மற்றும் உணவுக் கழிவுகளை மினி ஆட்டோவில் கொண்டு வந்து கொட்டியதாகக் கூறப்படும் இருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரியில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகள், மதுபானக் கழிவுகள் மற்றும் உணவுக் கழிவுகளை கொட்டி வருவதாக […]

August 6, 2026 Editor
திருச்செங்கோட்டில் டைமிங் பிரச்னையால் தனியார் பஸ்கள் போட்டி; நடுரோட்டில் நிறுத்தியதால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு Breaking News

திருச்செங்கோட்டில் டைமிங் பிரச்னையால் தனியார் பஸ்கள் போட்டி; நடுரோட்டில் நிறுத்தியதால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு

திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் டைமிங் பிரச்னை காரணமாக போட்டி போட்டுக் கொண்டு சென்ற இரண்டு தனியார் பஸ்கள், நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் ஈரோடு செல்லும் பிரதான ரோட்டில் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு பஸ்களையும் பறிமுதல் செய்து, டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை எச்சரித்தனர். திருச்செங்கோட்டில் இருந்து சேலம், ஈரோடு, வேலூர், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாகவே தனியார் […]

August 6, 2026 Editor
திருச்செங்கோட்டில் நள்ளிரவில் விபத்து; கார் – இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு Breaking News

திருச்செங்கோட்டில் நள்ளிரவில் விபத்து; கார் – இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் நள்ளிரவில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அபிஷேக் (29), தனது நண்பர் பார்த்திபன் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த பார்த்திபன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து […]

August 4, 2026 Editor
உடனடி செய்திகள்