32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ராசிபுரத்தில் சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த 7 குறவர் பழங்குடியின வீரர்களுக்கு வீரவணக்கம்.

Editor Published: August 15, 2026 1 நிமிட வாசிப்பு ராசிபுரம்
எழுத்து அளவு:

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த 7 குறவர் பழங்குடியின வீரர்களுக்கு ராசிபுரத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வன வேங்கைகள் கட்சி சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார்.

இதையடுத்து, வன வேங்கைகள் கட்சியினர் மற்றும் பழங்குடியின மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து, சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த குறவர் பழங்குடியின வீரர்களின் நினைவாக மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

About The Author