
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் அம்மனுக்கு ஸ்ரீ சந்திரகலாதேவி நிலாபிறை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் சிறப்பு அலங்காரங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வளையல், தாலிக்கயிறு, குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்களை கொண்டு வந்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.