ராசிபுரம்
ராசிபுரம் அருகே தொழில் ஆசைகாட்டி விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் மோசடி?.
ராசிபுரம் அருகே பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறி, விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், தங்கராஜ், சுந்தர்ராஜன், பூபதி உள்ளிட்ட விவசாயிகளிடம், புதுச்சத்திரம் அருகே செம்மாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, டிராக்டர் விற்பனை நிலையம், […]