Breaking News
திருச்செங்கோட்டில் டைமிங் பிரச்னையால் தனியார் பஸ்கள் போட்டி; நடுரோட்டில் நிறுத்தியதால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு
திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் டைமிங் பிரச்னை காரணமாக போட்டி போட்டுக் கொண்டு சென்ற இரண்டு தனியார் பஸ்கள், நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் ஈரோடு செல்லும் பிரதான ரோட்டில் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு பஸ்களையும் பறிமுதல் செய்து, டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை எச்சரித்தனர். திருச்செங்கோட்டில் இருந்து சேலம், ஈரோடு, வேலூர், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாகவே தனியார் […]