32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்லில் சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன நிர்வாகம் குறித்த சர்வதேச மாநாடு நிறைவு.

Editor Published: September 4, 2026 2 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

நாமக்கல்லில் கே.கே.பி. குழும நிறுவனங்கள் மற்றும் ரீடிஃபைன் குழும நிறுவனங்கள் சார்பில் நடைபெற்றசுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன நிர்வாகம் – 2026’ என்ற சர்வதேச மாநாடு சிறப்பாக நிறைவடைந்தது.

நாமக்கல் ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு, நிறுவன நிர்வாகம் தொடர்பான சர்வதேச விதிமுறைகள், சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மாநாட்டில் கே.கே.பி. குழுமத் தலைவர் பி. நல்லதம்பி, ரீடிஃபைன் குழும முதன்மை நிர்வாக அதிகாரி ஸ்ரீநாத் கே.பி., கே.கே.பி. குழும மேலாண்மை இயக்குநர் சதீஷ்குமார், ரீடிஃபைன் குழும தலைமை ஆலோசகர் ஸ்ரீதர் ராஜகோபால், கே.கே.பி. குழும இணை மேலாண்மை இயக்குநர் சுபாஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், WRAP இந்தியா செயல்பாட்டுத் தலைவர் வினய் சக்சேனா, வங்கதேசம் உர்மி குழுமத்தின் நிலைத்தன்மைத் துறை தலைவர் .பி.எம். ஃபக்ருல் ஆலம், எல்.எஸ்.. நிறுவனத்தின் ரம்யா கண்டியூர், டிபெல்லா இந்தியா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீரங்கா ராஜன், அஸ்மாரா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உலகளாவிய இணக்கம் மற்றும் நிலைத்தன்மைத் துறை தலைவர் சிவானி பானர்ஜி உள்ளிட்ட நிபுணர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஐரோப்பிய விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்

மாநாட்டின் முக்கிய நிகழ்வாகஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுக்கு இணங்குவதா? அல்லது சர்வதேச சந்தையில் இருந்து வெளியேறுவதா?’ என்ற தலைப்பில் உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் நடைபெற்றது.

2027-ஆம் ஆண்டுக்குள் இந்திய ஜவுளித்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன நிர்வாக விதிமுறைகளுக்கு இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதித் துறை தயாராக வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றத் தவறினால், சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளி நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடிய வர்த்தக பாதிப்புகள் மற்றும் சவால்கள் குறித்தும் நிபுணர்கள் விளக்கினர்.

மேலும், சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன நிர்வாகம் தொடர்பான அறிக்கைகளைத் தயாரிப்பது மற்றும் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப நிறுவனங்களின் செயல்பாடுகளை அமைப்பது போன்றவற்றை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் எளிமைப்படுத்தும் வழிமுறைகள் செயல்விளக்கமாக எடுத்துக்காட்டப்பட்டன.

சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தொழிலாளர் நலனுக்கும் முக்கியத்துவம்

ஜவுளித்துறையில் சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன நிர்வாகம் என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மட்டும் சார்ந்தது அல்ல என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

உற்பத்தி, ஆற்றல் பயன்பாடு, நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் நலன், ஏற்றுமதி மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுடனான வர்த்தகம் உள்ளிட்ட நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் இந்த நடைமுறைகள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளித்துறை தொடர்ந்து போட்டியிடவும், ஏற்றுமதி வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன நிர்வாகக் கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன் மாநாடு நிறைவடைந்தது.

About The Author