32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

வெப்படையில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

Editor Published: September 11, 2026 1 நிமிட வாசிப்பு குமாரபாளையம்
எழுத்து அளவு:

வெப்படை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெப்படை பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாதது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், இன்று காலை காலி குடங்களுடன் வெப்படை பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் போக்குவரத்து நெரிசல்

பொதுமக்களின் திடீர் சாலை மறியல் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் வெப்படை பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெப்படை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

பொதுமக்களுக்கு கூடிய விரைவில் சீரான முறையில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் வெப்படை பகுதியில் பரபரப்பு நிலவியது.

குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

About The Author