நாமக்கல்
பெற்றோரிடம் ஆவணங்கள் இருந்தும் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியப் பகுதிகளில் வசிக்கும் ரெட்டி (கஞ்சம்) சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, பெற்றோரிடம் உரிய ஆவணங்கள் இருந்தும் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், ரெட்டி (கஞ்சம்) சமூகத்தினர் தமிழ்நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுதொடர்பாக 1981-ம் ஆண்டு சமூக நலத்துறை அரசாணை எண் 541 உள்ளிட்ட பல்வேறு […]