பரமத்திவேலூர்
ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.
ராஜா வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பரமத்திவேலூர் அருகே 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்காலுக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் பரமத்திவேலூர், பொத்தனூர், நஞ்சை இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலை, […]