ராசிபுரம்
ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகள் திருட்டு.
ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியைச் சேர்ந்தவர் பேபி (56). இவர் தனது தாயார் லட்சுமியுடன் வசித்து வருகிறார். கடந்த 17-ம் தேதி லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேபி அனுமதித்துள்ளார். இதையடுத்து கடந்த […]