திருச்செங்கோடு
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பாலிடெக்னிக்கில் ‘பாலிபியஸ்டா’ விழா.
திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பப் பயிலகத்தில் (பாலிடெக்னிக்) ‘பாலிபியஸ்டா’ விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழாவில் தொழில்நுட்ப கருத்தரங்கு, ப்ராஜெக்ட் எக்ஸ்போ, கிரிக்கெட், வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், பசுமை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், 6ஜி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளை சமர்ப்பித்து விளக்கினர். கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.சீனிவாசன், துணைத்தலைவர் […]