ஆன்மீகம்
ஆடி 4-வது வெள்ளி: தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த அழகுமுத்து மாரியம்மன்; திரளான பக்தர்கள் தரிசனம்
ஆடி மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு தேரடி வீதி, ஐந்து ரோடு பகுதியில் உள்ள அழகுமுத்து மாரியம்மன் கோயிலில், அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் திரளாகக் குவிந்ததால், கோயில் வளாகம் முழுவதும் பக்தி பரவசமான […]