பரமத்திவேலூர்
ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி வணிகர்கள் கடையடைப்பு.
ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பரமத்தி வேலூரில் வணிகர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு வழங்கப்பட்டு வந்த பாசன நீர், கடந்த 22 நாட்களுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ராஜவாய்க்கால் பாசனத்தை […]