பரமத்திவேலூர்
பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக் கோரி ப.வேலூரில் நாளை கடையடைப்பு: கொமதேக ஆதரவு.
காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக் கோரி பரமத்தி வேலூரில் நாளை நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி தடுப்பணையில் இருந்து ராஜாவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால், பள்ளவாய்க்கால், பொய்யேறி வாய்க்கால் என 5 பாசன வாய்க்கால்கள் மூலம் 16,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. […]