நாமக்கல்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நாமக்கல்லில் சமூக ஆர்வலர் உண்ணாவிரதம்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, வேலகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் விவசாயியுமான என். பூபதி, தனது வீட்டில் இன்று தனிநபர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பள்ளபாளையம் ஏரி, பெரியமணலி மற்றும் சேர்வம்பட்டி பெரியகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஏக்கர் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பூபதி வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் […]