இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 10 மணியளவில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணியளவில் அடசல் பெரும்பூஜையும் நடைபெற்றது.
விளம்பரம்
பின்னர் மதியம் 1 மணியளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கொன்னையார் கிராம பொதுமக்கள் மற்றும் குடிப்பாட்டு மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை பூசாரி சரவணன் செய்திருந்தார்.