vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோடு அருகே கிரஷரில் கலெக்டர் திடீர் ஆய்வு!

By Editor | Jul 22, 2026
photo caption – 1

திருச்செங்கோடு அடுத்த கோக்கலை பகுதியில் செயல்பட்டு வரும் கிரஷரில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன், மாவட்டம் முழுவதும் பல்வேறு பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, திருச்செங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட கோக்கலை பகுதியில் இயங்கி வரும் கிரஷர் ஒன்றில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்த ஆய்வின் போது, கிரஷரின் செயல்பாடுகள் குறித்தும், அரசு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.