vmtalks.com ⚡ AMP

விநாயகர் சதுர்த்தி: சுற்றுச்சூழலை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

By Editor | Sep 04, 2026

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்டகால பாரம்பரியம் உள்ளதாகவும், விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்ய வேண்டியவை

செய்யக்கூடாதவை

விநாயகர் சதுர்த்தி விழாவை பக்தியுடன் கொண்டாடுவதுடன், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.